tamilnadu

img

சென்னை விமான நிலையத்தில் 1.19 கிலோ தங்கம் பறிமுதல்...

சென்னை:
சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வியாழனன்று (டிச. 3) நடத்திய சோதனையில், 1.19 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது. இதன் மதிப்பு ரூ.59.85 லட்சம்.துபாயில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பயணிகள் இருக்கை ஒன்றின் அடியில், துணிப்பை ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுமார் 6 தங்க துண்டுகள் 1 கிலோ எடையில் இருந்தன. இதன் மதிப்பு ரூ.50 லட்சம். இதை யாரும் உரிமை கோரவில்லை.பிளை துபாய் விமானத்தில் வந்த வேலூரைச் சேர்ந்த விவேக் மனோகரன் (30) என்ற பயணியிடம் நடத்தப்பட்ட  சோதனையில், அவர் அணிந்திருந்த செருப்பில் 199 கிராம் எடையில், தங்க துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு 9.85 லட்சம்.மொத்தம் 1.19 கிலோ  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.59.85 லட்சம். இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடப்பதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

;