tamilnadu

ஆட்டோ தொழிலாளி மரணத்திற்கு நீதிக் கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை, ஜூலை 9- மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் செங் கோட்டைமேலூர் கிளை சார்பாக விகே புதூர் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர்  மற்றும் காவ லர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்திட கோரியும், காவல்துறை யால் துன்புறுத்தி அடித்து கொலை செய்யப்பட்ட ஆட்டோ தொழிலாளி குமரேசன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்கிட கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட கோரியும் செங்கோட்டை மேலூர் கிளை செயலாளர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் முருகேசன் கண்டன உரை யாற்றினார். குமாரசாமி, சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.