tamilnadu

img

ஆசிய நாடுகளுக்கு மருத்துவப் பொருட்களை அனுப்பிய சீனா

பெய்ஜிங், மார்ச் 30- உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் நோய்க்கு  சில நாடுகளில் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அண்மையில், சில ஆசிய நாடுகளுக்கு சீனாவின் பல்வேறு சமூக வட்டாரங்கள் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கின. சீனாவின் யுன்னான் மாநில அரசு, மாலத்தீவுக்கு வழங்கிய உதவிப் பொருட்கள் மார்ச் 27 அன்று அந்நாட்டுக்குச் சென்றடைந்தன.  மங்கோலியாவுக்கு சீன அரசு வழங்கிய உதவிப் பொருட்கள் 28 ஆம் தேதி உலான்பாடர் நகரைச் சென்றடைந்தது. இதுகுறித்து அந்நாட்டின் துணை தலைமையமைச்சர் உல்ஸீசைகான் என்க்துவ்ஷின் கூறுகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையை இந்தப் பொருட்கள் ஊட்டியுள்ளன என்றார். சீன நாட்டின் பல்வேறு தரப்புகள் வழங்கிய 3 டன் எடை கொண்ட உதவிப் பொருட்கள் மார்ச் 29 அன்று நேபாளத்தைச் சென்றடைந்தன.  அதேநாள், சீனாவின் அலிபாபா குழுமத்தின் பொது நல நிதியமும், ஜாக் மா பொது நல நிதியமும் வழங்கிய மருத்துவப் பொருட்கள் வங்காளத்தேச அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பரவலை வங்காளதேசம் சமாளிப்பதற்கு இப்பொருட்கள் உதவி அளிக்கும் என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சீன மருத்துவ நிபுணர்கள் லாவோஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்று மருத்துவ உதவிகளை அளித்துள்ளனர்.