கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சூழலில் உலகம் முழுவதும் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் உலகின் பல பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு காலத்தில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகரித்து உள்ளது என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் குட்ரெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது கொரோனா அச்சத்தால் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என வேதனை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் குடும்பங்களில் அமைதி நிலவ வேண்டும். மேலும் பெண்கள் பாதுகாப்பை அனைத்து நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.