tamilnadu

img

கரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உவான் நகரில் இந்த கரோனா வைரஸ் பாதிப்புடன் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கரோனா வைரஸ், சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த என்றும், வவ்வால்களில் இருந்து வந்தவை என்றும், மற்றொரு அறிந்து கொள்ள முடியாத இடத்திலிருந்து வந்தவை என்றும், பின்னர்  பாம்புகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்றும் சீன ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2744 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தி உள்ளது.

மேலும், இந்த வைரஸ் சீனாவில் இருந்து பல உலக நாடுகளில் பரவி உள்ளது. தாய்லாந்தில் 7 பேரும், ஜப்பானில் 3 பேரும், கொரியாவில் 3 பேரும், ஆஸ்திரேலியாவில் 4 பேரும், பிரான்சில் 3 பேரும், அமெரிக்காவில் 3 பேரும், சிங்கப்பூரில் 4 பெரும், வியட்நாமில் 2 பேரும், நேபாளத்தில் ஒருவரும் இந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.