tamilnadu

img

சட்டவிரோத மணல் கொள்ளை இளையான்குடி தாலுகா அலுவலகம் முற்றுகை

சிவகங்கை, ஜூன் 4- சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி தாலூகா முத்தூர் கிரா மத்தில் சட்டவிரோதமாக கண் மாயில் மணல், சவுடு அள்ளு வதை தடுக்க வலியுறுத்தி முத் தூர் கிராமத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியா ழனன்று இளையான்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட னர்.  போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, மாவட் டச் செயற்குழு உறுப்பினர்கள் தண்டிப்பன், முத்துராமலிங்க பூபதி, ஒன்றியச் செயலாளர் அழ கர்சாமி, முத்தூர் ஊராட்சித் தலை வர் பாண்டிச்செல்வி மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்ட னர். போராட்டக்காரர்களுடன் வட்டாட்சியர் ரமேஷ், சாலைக் கிராமம் காவல்துறை ஆய்வா ளர் வசந்தி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது முத்தூரில் மணல் குவாரி செயல் படக்கூடாது என வலியுறுத்தினர். வட்டாட்சியரோ மாவட்ட ஆட்சி யரிடம் பேசி முடிவு சொல்வதா கக் கூறி நழுவிக்கொண்டார்.

;