சிதம்பரம்
சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சியில் சாதி ஆதிக்க சக்திகளால் தலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்த கொடுமையை கண்டித்து சிதம்பரம் நகரில் வியாழனன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பின்னர் ராஜேஸ்வரியின் இல்லத்திற்கு சென்று அவரை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள்
நேரில் சந்தித்து பேசினர். (செய்தி 5)