சிதம்பரம், ஜூன் 4-கடலூர் மாவட்டம் புவனகிரியில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிபிஎம் சார்பில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஆர்.சதானந்தம் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெற்றிவேல், ஸ்டாலின்,சதீஷ் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். புவனகிரி நகரச் செயலாளர் மணவாளன் வரவேற்றார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு நோட்டுகளை வழங்கினார். மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் பேசினார்கள். காங்கிரஸ் கட்சியை சார்ந்த ராம் குமார், புவனகிரி பகுதி தொழிலதிபர் சுந்தரேசன், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், காளி கோவிந்தராசு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.