tamilnadu

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி துவங்க வலியுறுத்தல்

சிதம்பரம், மே 31-தனியார் பள்ளிகளின் மோகத்தால் பொதுமக்கள் அரசு பள்ளிகளை தவிர்த்து ஆரம்ப நிலையிலே எல்கேஜி, யுகேஜி பாடப் பிரிவுகளில்  குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இதனால் தமிழக அளவில்   அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக மோசமாக குறைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகள் மூடும் நிலைக்கு சென்று விட்டது.இந்த நிலையில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிக்கு இணையாக உயர்த்த தமிழ அரசின் பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்த மாணவர்களும் அரசு பள்ளிகளை காக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இது ஏழ்மைநிலை மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதனிடையே அரசு இந்த ஆண்டு முதல் தொடக்கப் பள்ளி, மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் அங்கன்வாடி மையம் உள்ள பள்ளிகளில் மட்டும் ஆங்கில வழி எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கவுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கும் எண்ணமுள்ள பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பார்கள் என்று எதிர்பாக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அங்கன் வாடி மையம் இல்லாத தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் சுற்றுவட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் கூடுதலாக மாணவர்கள் சேர்கை நடைபெறும் என்று பொதுமக்கள் மத்தியில் கூறப்பட்டுள்ளது.