tamilnadu

img

எடப்பாடி அரசின் தோல்வியே தெற்குதிட்டை சம்பவம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி...

சிதம்பரம்:
சிதம்பரம் அருகே தலித் ஊராட்சி மன்றத் தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட சாதிய ஒடுக்குமுறை தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட தோல்வி என்றும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் வண்ணம் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து அரசின் முகத்திரையை கிழிக்கபடும் என்றும் சாமுவேல்ராஜ் தெரிவித்தார்.

தெற்குதிட்டை தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் உட்கார வைத்த சாதிய ஆதிக்க வன்கொடுமையை கண்டித்து சிதம்பரம் சாராட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, சுப்புராயன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் பி.கற்பனைச் செல்வம், சதானந்தம், ராஜா, வாஞ்சிநாதன், மூர்த்தி, முத்து கிருஷ்ணன், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் மேரி சிதம்பரம் நகரத் தலைவர் அமுதா, செயலாளர் மல்லிகா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குமரவேல் மற்றும் பலர் கண்டன உரையாற்றினர்.சம்பந்தப்பட்ட ஊராட்சி துணைத் தலைவரை விரைவில் கைது செய்ய வேண்டும், அவரை தகுதி நீக்கம் செய்து ஊராட்சி தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.மாவட்டத்தில் உள்ள அனைத்து தலித் ஊராட்சி மன்ற தலைவர்களும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ்,” தெற்கு திட்டை மட்டுமல்ல தமிழகத்தின் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகளை ஒட்டி கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள தலித் ஊராட்சி தலைவர்கள் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வு செய்து தமிழக அரசின் முகத்திரையை கிழிக்கும் என்றார்.