சென்னை, ஜூலை 21 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொன்விழா மற்றும் கலை நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. மத்திய அமைப்பின் மத்திய சென்னை, தெற்கு சென்னை 1, வடக்கு சென்னை, பொதுக்கட்டுமான வட்ட கிளைகள் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாநிலச் செயலாளர் எம்.தயாளன் தலைமையேற்றார். ஏ.முருகானந்தம் வரவேற்றார். தேசிய திரைப்பட விருது பெற்ற இயக்குநர் ஜி.வசந்தபாலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மின்ஊழியர் மத்தியஅமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் எஸ். இராசேந்திரன், பொருளாளர் எம்.வெங்கடேசன், துணைப் பொதுச் செயலாளர் டி.ஜெயசங்கர், வடக்கு மண்டலச் செயலாளர் ஆர்.ரவிக்குமார், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் எம்.தனலட்சுமி, மத்திய சென்னை தலைவர் வி.சீனிவாசன், செயலாளர் எஸ்.கண்ணன், ஜிசிசி நிர்வாகிகள் எம்.முத்து, ஜி.பாலு, வடக்கு சென்னை பி.கதிரேசன் ஆகியோர் பங்கேற்று பேசினர். வடக்கு செயலாளர் ஜி.மதனகோபால் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகை யில், “தொழிற்சங்கங்கள் குடும்ப விழாவை நடத்த ஒரு முன்னுதாரணம்” என்றார். மத்திய பாஜக ஆட்சியில் நாடு சீரழிவை நோக்கி செல்கிறது. பொதுத்துறை அழிப்பு, இந்தி திணிப்பு, வர்ணாசிரம வெறி, மாட்டுக்கறி எதிர்ப்பு பிரச்சாரங்களை நாம் தகர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், “மின் ஊழியர்களின் குடும்பங்கள் சார்பில் இந்த பொன்விழாவில், தீக்கதிருக்கு ஆண்டு சந்தா 750 வழங்கியிருப்பது உன்னதமான பணியாகும். உங்களது இந்த பணி மேலும் சிறக்க வேண்டும். தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த தீக்கதிரை ஊடகமாக பயன்படுத்த வேண்டும். மக்களின் ஒற்றுமைக்காகவும் இயற்கை வளங்கள் சூறையாடப்படாமல் பாதுகாக்கவும் நாம் போராடவேண்டும்” என்றும் அ.சவுந்தரராசன் கூறினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், “சுயநலத்திற்காக எதை வேண்டு மானாலும் செய்யக்கூடிய அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் அமைந்துள்ளன. நம்மையும் நமது வாழ்வாதாரத்தையும் பாது காக்க நாம்தான் களத்தில் நிற்கவேண்டி யுள்ளது. மின்சாரத்துறையை மூன்றாக பிரிக்கும் திட்டத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற நாம் எதிர்காலத்தில் தேசத்தை பாது காக்க சிஐடியு தலைமையில் அணிதிரள வேண்டும்” என்றார்.
இயக்குநர் வசந்தபாலன்,“மின் ஊழியரின் மகனாக பிறந்த காரணத்திற்காகவும் அமைப்பு சாரா தொழிலாளர்களான துணிக் கடைதொழி லாளர்களின் பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அங்காடித்தெரு படத் தை தூக்கி கொண்டாடியதற்காகவும் சிஐடியு விற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்”என்றார். “குழந்தைகள் செல்போனிடமும், குடும்பங் கள் பிக்பாஸிடமும் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த மோசமான சூழலில் ஒரு தொழிற்சங்கம் இதுபோன்ற குடும்பவிழா நடத்துவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இயக்கத்திற்காக அர்ப்பணித்தவர்களின் தோளில் அமர்ந்து கொண்டு நாம் சந்தோசமாக இருக்கிறோம். நுழைவுத்தேர்வுக்காக குழந்தைகளை தயார்படுத்தும் பரிதாபகரமான நிலையில் தான் நாம் இருக்கிறோம்” என்றும் கூறினார். தீக்கதிர் முதன்மைப் பொதுமேலாளர் க.கனகராஜ், “பொதுவாக பத்திரிகைகள் தங்களை நடுநிலை என்று கூறிக்கொள்ளும். ஆனால், எங்கள் தீக்கதிர் நடுநிலை நாளிதழ் அல்ல. நடுநிலை என்று பம்மாத்து செய்து கொண்டது கிடையாது. தொழிலாளி வர்க்க த்தின் சார்பு நிலை கொண்டது. சுரண்டப்படு கிற தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசும், குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும்” என்றார். இவ்விழாவில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய மற்றும் வடக்கு சென்னை, தெற்கு சென்னை-1, பொதுகட்டு மான வட்ட சென்னை கிளைகள் சார்பில் சேகரிக்கப் பட்ட 750 தீக்கதிர் ஆண்டு சந்தாக்களை மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் க.கனகராஜ், சென்னை பதிப்பு பொதுமேலாளர் சி.கல்யாண சுந்தரம் ஆகியோரிடம் வழங்கினார். நீட் தேர்வில் வெற்றிபெற்ற மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. உயர் மின்சார இணைப்பு பிரிவில் தன்னலம் பாராமல் திறம்பட பணியாற்றிய மின்பாதை ஆய்வாளர் ராஜேந்திர னின் (எச்டி ஜாயிண்டர்) சேவையை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
கலைநிகழ்ச்சிகள்
பொன்விழாவில் முத்தாய்ப்பாய் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மு.கலை வாணன் குழுவினரின் வில்லுப்பாட்டு மற்றும் “நடக்காது” என்ற நாடகம், லேக்லாக்கர்ஸ் நடனக்குழுவினரின் நடனம், புதுகை பூபாளம் குழுவினரின் னையாண்டி நிகழ்ச்சி, முத்துராமலிங்கம் சிலம்பாட்டக்குழுவின் கிராமிய வீரவிளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.