tamilnadu

img

ஆறுகளில் சாயநீரை வெளியேற்றினால் சாய ஆலை மூடப்படும் : அமைச்சர் எச்சரிக்கை

ஈரோடு,செப்.8- காவிரி மற்றும் பவானி ஆறுகளில் சாயநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சாய ஆலை மூடப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் எச்சரித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட நிழல் கூடத்தின் திறப்பு விழாவிற்குப் பின்னர்  அமைச்சர் கே.சி கருப்பணன், செய்தியாளர்களிடம் கூறுகை யில், காவிரி மற்றும் பவானி ஆறுகளில் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்றும் சாய ஆலைகள் மூடப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மணியாட்சி திட்டம் அல்லது மேட்டூர் வலது கரை வாய்க்கால் திட்டத்தை அரசு விரைந்து நிறைவேற்றித் தரும் என்றும் உறுதியளித்தார்.