tamilnadu

img

“சாதிக்கெதிராய் என் குரல்”

சென்னை, ஜூலை 18- “சாதிக்கெதிராய் என் குரல்” என்ற உறுதிமொழியை ஒவ்வொரு வரும் ஏற்க வேண்டும் என்றும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக சமூகத்தில் ஒவ்வொரு வருடனும் விரிவான உரையாடலை நடத்த வேண்டும் என்றும் அதன் மூல மாக சாதிய கொடுமைகளுக்கு எதி ரான உணர்வை சமூகத்தில் விதைக்க வேண்டும் என்றும் சுதந்திரப் போரா ட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் களில் ஒருவருமான என்.சங்கரய்யா அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 15, 16, 17 தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறு கிறது. இதையொட்டி “சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழு வதும் அனைத்து தரப்பு மக்களுட னும் ஒரு விரிவான - பரந்துபட்ட உரை யாடலை ஒரு மாத காலம் தீண்டாமை  ஒழிப்பு முன்னணி நடத்துகிறது. அந்த உரையாடலை ஜூலை 18 வியா ழனன்று சென்னையில் இணைய வழியாக என். சங்கரய்யா துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் இன்னும் நிலவுகிற தீண்டாமைக் கொடுமைகள், சாதிய ஆதிக்க வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு முடிவுகட்டும் விதமாக அனைத்து பகுதி மக்களையும் அணிதிரட்ட வேண்டியது நமது கடமை என அழைப்பு விடுத்தார். 

விடுதலைப் போராட்டத்தில் சாதிய வேறுபாடு களைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் விடுதலை கீதம் முழங்கி னார்கள்; ஆனால் விடுதலை இந்தியா வில் சாதியம் தொடர்ந்து நீடித்து வரு கிறது; இதற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களையும் அணிதிரட்டு வதும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் பொருளாதார விடுதலைக் கான போராட்டத்தை தொடர்ந்து உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வ தும் நமது கடமை என்றும் அவர் அறைகூவல் விடுத்தார். முதுபெரும் தலைவர் என்.சங் கரய்யாவின் இந்த அறைகூவலுடன் தமிழகம் முழுவதும் சாதிய ஆதிக்க வன்முறைகள், ஆணவப் படுகொலை கள், தீண்டாமைக் கொடுமைகள் ஆகியவற்றிற்கு எதிராக சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் கருத்துக் களையும் ஒன்றிணைக்கும் விதமாக ஒரு விரிவான உரையாடல் நிகழ்வு துவங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கிளைகளும் ஊழியர்களும் பல்  வேறு வடிவங்களில் இந்த உரை யாடலை ஒருங்கிணைக்க உள்ளார் கள் என அமைப்பின் பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ் தெரிவித்தார்.