tamilnadu

img

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானை சேர்க்க சி.பி.ஐ.யிடம் புகார்

சென்னை,அக்.15- ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  சீமானைச் சேர்க்கக் கோரி, வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.  அதிகாரியிடம் தமிழ்நாடு காங்கிரஸ்  சட்டத்துறை சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சீமான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் டி.ஜி.பி  அலுவலகத்திலும், தேர்தல் ஆணை யத்திலும் காங்கிரஸ் கட்சி சார்பில்  சீமான் மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சி.பி.ஐ.யில் தொடர்ந்து நிலுவையில் உள்ள நிலை யில் அந்த வழக்கில் சீமானையும் இணைத்து விசாரணை நடத்தக் கோரி  சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் விசா ரணை அதிகாரி புனிதமணியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை கேட்டுள்ளோம்: சத்ய பிரத சாகு

சென்னை தலைமைச் செயல கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத  சாகு, “விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது  குறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலை யத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்  பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இது குறித்து  விரிவான அறிக்கை கேட்கப் பட்டுள்ளது” என்றார்.  சீமான் மீது காங்கிரஸ் எம்.பி.  ஜெயக்குமார் அளித்துள்ள புகார், இந்திய தலைமை தேர்தல் ஆணை யத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வும் அவர்கள் இறுதி முடிவை எடுப் பார்கள் எனவும் சாகு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு,  வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் மூலம் 1 கோடியே 87 லட்சம் வாக்கா ளர் விவரங்கள் திருத்தப்பட்டுள்ளது என்றார்.