tamilnadu

img

சுஷ்மா சுவராஜுக்கு இரங்கல் கூட்டம்

புதுதில்லி, ஆக.13 - முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  (67), கடந்த ஆக.6-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தி னர். இந்நிலையில், மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தலைநகர் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் செவ்வாயன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலை வர்கள் பங்கேற்றனர்.

;