புதுச்சேரி,ஆக.4- புலம் பெயர்ந்த தலித் மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதுச்சேரியில் முதல்வர் தலைமை யில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் பொரு ளாதாரத் தில் பின் தங்கியவர்களு க்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சி தலைவர்களுடனான கலந்தா லோனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி, திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, சிபிஎம் பிரதேச செயலாளர் ராஜாங்கம், மாநிலக் குழு உறுப்பினர் வி.பெருமாள், மூத்தத் தலைவர் முருகன், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், முன்னாள் செயலாளர் விசுவ நாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், மதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். தலைமைச் செயலர் அஸ்வின் குமார், அரசு செய லர்கள், துறை இயக்குநர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். என்.ஆர். காங்கிரஸ், அதிமுக இரு கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
தீர்மானம்
புதுச்சேரியில் புலம் பெயர்ந்த தலித் மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உள்ளதைபோல் 69 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதேப்போல் மற்ற கட்சியின் இடஒதுக்கீடு கொள்கைகளில் தங்கள் கட்சியின் கருத்துகளை வலியுறுத்தினர் மேலும் முதல்வ ரிடம் மனுவாகவும் அளித்தனர். மத்திய அரசின் 2019 புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. முதல்வர் பேட்டி கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- அனைத்து மாநிலங்களி
முதல்வர் பேட்டி
கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை நடைமுறைப்படு த்துவது சாத்தியமாக இருக்காது. மாநிலத்துக்கு மாநிலம் கல்வியின் திட்டங்கள் மாறுகின்றன. அதற்கு ஏற்றார் போல் புதிய கல்விக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். அது சம்மந்தமாக அரசின் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்று பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். எனவே, மத்திய அரசுக்கு புதுச்சேரி மாநில அரசின் கருத்துக்களை அனுப்புவ தற்கு முன்பு மீண்டும் ஒரு கலந்தா லோசனைக் கூட்டம் நடத்தப்ப டும். இதற்கிடையில் கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்களின் கருத்துக்களை கேட்பது என்றும் முடிவு செய்துள்ளோம். பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பொருத்த வரைக்கும், புதுச்சேரி மாநிலத்தில் உயர் சாதியினர் எத்தனை விழுக்காடு உள்ளா ர்கள். அதில் எவ்வளவு பேர் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கிறார்கள் என்பதை மாநில அரசு கணக்கெடுக்க வேண்டும். அதன் பிறகே இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் உருவாகும் என்றும் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது மற்றவர்களுக்கு உள்ள உரிமையை பறிப்பதாக இருக்கும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அமைச்சர வையில் முடிவு செய்யப்படும். அதன் பின்னர் அதை நடை முறைப்படுத்துவது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும். ஏற்கனவே, சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.