கோவை மாவட்டம் துடியலூர் அருகே யானை தாக்கி பெண் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் ஆனை மலை அடிவாரங்களில் உள்ள சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை பாப்பநாயக்கன் பாளையம் வரப்பாளையம் அருகே சுற்றிய ஒற்றையானை 45 வயது பெண் ஒருவரை தாக்கியது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.