tamilnadu

img

விரட்ட வந்த வனத்துறை வாகனத்தை எச்சரித்து சென்ற காட்டு யானை.

விரட்டி வந்த வனத்துறை வாகனத்தை எச்சரித்து சென்ற காட்டு யானை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள  சிறுமுகை லிங்காபுரம் கிராமத்தை ஒட்டி  பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதி உள்ளது. வனத்தில் இருந்து வரும் காட்டு யானை கூட்டங்கள் இந்நீர்தேக்கத்தில் தண்ணீர் அருந்தி விட்டு மீண்டும் அருகில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் சென்று விடுவது வழக்கம். ஒரு சில யானைகள் மட்டும் வனத்திற்குள் செல்லாமல் ஊருக்குள் நுழைய முற்படும். அப்போது அங்குள்ள வனத்துறையினர் இந்த யானைகளை அச்சுறுத்தி மீண்டும் வனத்தை நோக்கி யானைகளை அனுப்பி விடுவார்கள்.

செவ்வாயன்று மாலை நீர்தேக்கத்தில் தண்ணீர் அருந்திய இரு காட்டு யானைகள் அங்கிருந்த சாலையை கடந்து  கிராமத்திற்குள் நுழைய முற்பட்டன..இதனையடுத்து வனத்துறையினர் யானைகளை விரட்ட பயன்படுத்தப்படும் வாகனத்தில் சென்று ஹாரன் அடித்தபடி அவற்றின் அருகில் சென்று விரட்ட முற்பட்டனர். அப்போது ஒரு யானை திடீரென வனத்துறை வாகனத்தை நோக்கி கோபத்துடன் திரும்பி அவர்களை எச்சரிக்கை விடுக்கும் வகையில்  முன்நோக்கி வந்து தாக்குவது போல் முன்னேறி மிரட்டி விட்டு பின்னர் அமைதியாக திரும்பி காட்டுக்குள் சென்று மறைந்தது. யானைகளை அச்சுறுத்தி விரட்ட முயன்ற வனத்துறையினரை யானைகள் அச்சுறுத்தல் விடுத்து விட்டு சென்ற காட்சிகள் சமூக வளை தலங்களில் வைரலாகி வருகிறது..