tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேட்டூர் அணையில் நீர்வளத்துறையினர் ஆய்வு

சேலம், ஜூன் 4- ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள மேட்டூர் அணையில், நீர்வளத்துறை அதிகாரிகள் புத னன்று ஆய்வு செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிக ளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர் மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட் டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், குறுவை  சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை யிலிருந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தண் ணீரை திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், புத னன்று காலை மேட்டூர் அணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் ஆய்வு செய்தார். அணையின் வலது கரை, இடது கரை,  ஆய்வுச் சுரங்கம் பகுதிகளை பார்வையிட்ட அவர், சுரங்க கால்வாய் புனரமைக்கும் பணி, மேட்டூர் அணை யில் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வலுப்படுத் தும் பணியையும் பார்வையிட்டார். நீர்வளத்துறை கண் காணிப்பு பொறியாளர் சிவக்குமார், செயற்பொறி யாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல் வராஜ் ஸ்டான்லி, அணை உதவி பொறியாளர் சதீஷ் குமார் ஆகியோர் நீர்வரத்து, திறப்பு குறித்தும், பணி களின் விவரம் குறித்தும் விவரித்தனர்.

போக்சோ வழக்கின் கைதி தப்பி சென்றதால் காவலர்கள் சஸ்பெண்ட் உதகை

, ஜூன் 4- போக்சோ வழக்கு கைதி ஒருவரை நீதிமன்றத் திற்கு அழைத்து சென்றபோது, அவர் தப்பி சென்று விட்ட  சம்பவம் தொடர்பாக, 2 காவலர்களை பணியிடை நீக்கம்  செய்து நீலகிரி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட் டுள்ளார். நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த நியூஹோப்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூண்டி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு  சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட் டது. இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த  வழக்கு விசாரணைக்கு வராமல் ரவிக்குமார் தலை மறைவாக இருந்தார். எனவே ரவிக்குமாருக்கு உதகை  மகிளா நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தர விட்டது. புளியம்பாறை பகுதியில் தலைமறைவாக இருந்த ரவிக்குமாரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து கூடலூர் போக்குவரத்து காவலர் சிக்கந் தர் மற்றும் மசினகுடி காவல் நிலைய காவலர் கார்த்திக்  ராஜா ஆகியோர், ரவிக்குமாரை மருத்துவ பரிசோத னைக்கு அழைத்து சென்று விட்டு உதகை நீதிமன்றத் தில் நேர்நிறுத்த கூடலூரிலிருந்து உதகை செல்ல திட்ட மிட்டனர். இந்நிலையில், செவ்வாயன்று மதியம் கூடலூர் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஒரு ஓட்ட லில் சாப்பிட்டுவிட்டு போலீசார் பில் கொடுக்க சென்ற போது, ரவிக்குமார் தப்பி சென்று விட்டார். இது குறித்து கூடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்துவதற்காக அழைத்துச் சென்றவரை தப்ப விட்ட தற்காக காவலர்கள் சிக்கந்தர், கார்த்திக் ராஜா ஆகிய  இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து நீலகிரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவிட்டுள் ளார்.

1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம் சேலம்

, ஜூன் 4- சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங் கப்பட்டுள்ளதாக, சேலம் விதை ஆய்வு துணை இயக்கு நர் க.சித்ரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் விதை விற்பனை உரிமம் வழங்க அறி வுறுத்தப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தில், சேலம், அயோத்தியாப்பட்டனம், ஓமலூர், சங்ககிரி, ஆத் தூர், தலைவாசல் வட்டாரங்களில் உள்ள 212 கூட்டுறவு  கடன் சங்கங்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக் கல், புதுச்சத்திரம், எருமப்பட்டி, சேந்தமங்கலம், நாம கிரிப்பேட்டை, வெண்ணந்தூர், ராசிபுரம், மோகனூர், திருச்செங்கோடு, பரமத்தி, எலச்சிபாளையம், மல்ல சமுத்திரம், கபிலர்மலை, பள்ளிபாளையம் வட்டாரங் களில் 164 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங் கங்களுக்கும் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள் ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் விதை விற் பனை நிலையங்கள் என மொத்தம் 1,393 விதை விற் பனை நிறுவனங்களுக்கு விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தரமான விதை கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விதை விற் பனையாளர்கள், விவசாயிகளுக்கு விதை விற்பனை  செய்யும்போது விதைக்குரிய பட்டியலை கண்டிப்பாக  வழங்க வேண்டும். தரமான நல்ல முளைப்புத்திற னுடைய காலாவதி நாளுடன் கூடிய சான்று பெற்ற விதை களையே விற்க வேண்டும். இதனை மீறுவோர் மீது சட்ட  ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

கால்கள், வாய் மூலம் ஓவியம் வரைந்து அசத்தல்

பொள்ளாச்சி, ஜூன் 4- பொள்ளாச்சி, கோவில்பாளையத்தைச் சேர்ந்த கல் லூரி மாணவர், கால்கள் மற்றும் வாய் மூலம் ஓவியம்  வரைந்து தனது திறமையை வெளிப்படுத்தி வரு கிறார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி – எலிசபெத் தம்பதியின் மகன் வினோத் ஆல்வின். கல்லூ ரியில் 3 ஆம் ஆண்டு படிக்கும் இவர், பாலக்காடு சாலை யிலுள்ள புனித லூர்து அன்னை ஆலய வளாகத்தில் புத னன்று, தனது கண்களைக் கட்டிக்கொண்டு, கால்கள் மற்றும் வாய் மூலம் டாக்டர் அம்பேத்கர், தமிழக முதல் வர் ஸ்டாலின் ஆகியோரின் படங்களை வரைந்து அசத்தி னார். இதுகுறித்து அவர் கூறுகையில், சித்திரம் வரை வதில் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கும் ஓவியம்  கற்றுத் தருவதோடு, இந்த கலை வளர்ச்சிக்குப் தாம்  பெரும் பங்களிப்பு செலுத்தப் போகிறேன். தமிழக அரசு  எனது முயற்சிக்கு உதவி செய்ய வேண்டும், என் றார்.

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மயானத்தை அபகரிக்க முயற்சி

ஈரோடு, ஜூன் 4- ஈரோடு மாநகரில், பட்டியலின மக்கள் மக்கள் பயன்படுத்தி வரும்  மயானத்தை, ஆக்கிரமிக்க முயற்சி கள் நடப்பதாக புகார் எழுந்துள் ளது. ஈரோடு நகரம், நசியனூர் சாலை யில் மயானம் உள்ளது. கடந்த  60 ஆண்டுகளுக்கும் மேலாக வீரப் பன்சத்திரம், நாராயணவலசு, திரு மால் நகர், அடுக்குப்பாறை, கைகாட்டிவலசு, வாஞ்சிநாதன் நகர் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத் திற்கும் மேற்பட்ட பட்டியலி னத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் இந்த மயானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே, அதி கார வர்க்கத்தினர் கொஞ்சம் கொஞ் சமாக ஆக்கிரமித்து குடியிருப்பு கள் கட்டி ஆக்கிரமித்து வருகின்ற னர். கடந்த பல ஆண்டுகளாகவே பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு அருகில் உள்ள ஆதிக்க சாதியினர் ஆக்கிரமித்து வருவதால், சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். தண்ணீர் வசதி செய்து  கொடுக்க வேண்டும், என வலியு றுத்தி மாவட்ட ஆட்சியர், கோட்டாட் சியர், வீரப்பன்சத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தர். இதனால் அரசு தரப்பில் அளவீடு செய்யப்பட்டது. ஆனால், தொடர்ந்து மயானமாக மாற்றி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. தற்பொழுது மாவட்ட ஆட்சி யரின் அனுமதியின்றி, மாநகராட்சி  பொறியாளர்கள் மற்றும் நில அள வர்கள் அளவீடு செய்து, ஒரு குறிப் பிட்ட ஆதிக்க சாதியினருக்கு ஆதர வாக அரசு நிலத்தை அளந்து, அவர்களாகவே அரசு நிலத்தில் தனியார் கடைகளுக்குச் செல்ல பொதுப்பாதை அமைக்க முயற்சி கள் மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் பட்டியலின மக்கள் மயானமாகப் பயன்படுத்தும் நிலத்தை அகற்றிவிட்டு, தனியார் கடைகளுக்கு செல்வதற்கு உத வும் வகையில் மாநகராட்சி நிர்வா கம் செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அரசு நிலத்தில் எவ்வித  முன்னறிவிப்பும் இன்றி அளவீடு செய்தது குறித்து, ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு மாவட்ட  ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.  ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி, மயானத்திற்குச் சுற்றுச்சுவர் மற்றும்  தண்ணீர் வசதி செய்து தர வேண் டும், என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற் றும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, உரிய முறையில் அள வீடு செய்ய வேண்டும், என உத்தர விடப்பட்டது. அதன்பேரில் புத னன்று சம்பவ இடத்திற்கு வந்த அதி காரிகள், முறையாக அளவீடு செய்யப்படும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளிடம் கூறிவிட்டு, திரும்பிச் சென்றனர்.