tamilnadu

img

ஆழியாறு அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஆழியாறு அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி, மே 16- ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட் டுப் பாசனத்திற்கு வெள்ளி யன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனைமலை வட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட் டத்தின் கீழ் வரும் பழைய ஆயக்கட்டுப் பாசனப் பகுதி களின் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல் போக பாசனத்திற்காக ஆழி யாறு அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் வெள்ளி யன்று தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 6000 ஏக்கர் பரப்பளவிலான விவ சாய நிலங்கள் பாசன வசதி பெறும். சுமார் 152 நாட்களுக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பரம்பிக்குளம் கோட்ட செயற்பொறியாளர் டி.சிவகுமார், சமமட்ட கால்வாய் உபகோட்ட உதவி பொறியாளர்கள், ஆனைமலை வட் டாட்சியர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.