காழ்ப்புணர்ச்சியோடு கொடி மரம் அகற்றம்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவை, மே 16 – காழ்ப்புணர்ச்சியோடு, கொடிக்கம் பத்தை அகற்றி, கல்வெட்டை சேதப்படுத் திய மதுக்கரை உதவி கோட்டப் பொறியா ளர் தங்க அழகுராஜை கண்டித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, பாலக்காடு சாலையில் உள்ள பிற கொடிக்கம்பங்கள் அகற்றப்படாத நிலையில், தங்களது சங்கத்தை மட்டும் குறிவைத்து அகற்றிய மதுக்கரை உதவி கோட்டப்பொறியாளர் நடவடிக்கையை கண் டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை - திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் என்.பானுலதா தலைமை ஏற்றார். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஜெகநாதன், மாவட்டச் செயலாளர் ஏ.லதா, செவிலியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.பிரக லதா, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜகோ பால் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில், தமிழ்நாடு சத்துணவு அங்கன் வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் கே. பழனிச்சாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்க மாநிலச் செயலாளர் ஜெ. நிர்மலா ஆகியோர் நிறைவுரையாற்றினர். மாவட் டப் பொருளாளர் ப.சுதா நன்றி கூறினார்.