விளையாட்டுப் பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்
சங்ககிரி அருகே பராமரிப்பின்றி கிடக் கும் விளையாட்டுப் பூங்காவை சீரமைத்து, பராமரிக்க வேண்டும், என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரி, மோரூர் மேற்கு ஊராட்சி, சாம்பன்காடு பகுதியில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. அங்கு காலை, மாலையில் இளைஞர்கள், முதியவர் கள் உடற்பயிற்சி செய்தும், குழந்தைகள் விளையாடியும் வந்தனர். ஆனால், கடந்த சில வருடங்களாக பராமரிக்கப்படாததால், பூங்கா முழுவதும் புற்கள் முளைத்தும், மழைநீரால் பொருட்கள் துருப்பிடித்து பயன் பாடின்றி கிடக்கின்றன. மேலும், உடற்பயிற்சி கூடத்திலிருந்த உபகரணங்கள் திருடு போயின. இதனால் இளைஞர்கள் 5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சங்ககிரி, திருச்செங் கோடு நகர் பகுதிகளுக்கு சென்று தனியார் உடற்பயிற்சி கூடத்தில் கட்டணம் செலுத்தி பயிற்சி பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே, பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து, முறையாக பராம ரிக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக் கள் வலியுறுத்தியுள்ளனர்.