tamilnadu

img

சேலம் உருக்காலை தனியார்மயம் ரத்து நாடாளுமன்றத்தில் அறிவிக்க வலியுறுத்தல்

சேலம் உருக்காலை,  ஒன்றியஅரசின் செயில் நிறுவனத் தால் செயல்படுத்தப்பட்டு வரும்  முக்கியமான அரசு நிறுவனமாக உள்ளது. சேலம் மாவட்டம், கஞ்ச மலை அடிவாரத்தில் உருக்காலை  அமைந்துள்ளது. கடந்த 1981 ஆம்  ஆண்டு ரூ.181.19 கோடி மதிப்பில்,3  ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் துவங் கப்பட்டது.  இந்நிலையில், சேலம் உருக்கா லையை தனியார்மயமாக்கும் முடி வினை ஒன்றிய பாஜக அரசு மேற் கொண்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இச்செயலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக தொழிற்சங்கங்கள் 60 நாட்க ளுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக ஒன்றிய அர சால் விடப்பட்ட உலகளாவிய ஒப்பந் தம் நிறுத்தப்பட்டது. மேலும், ஆலையை பார்வையிட வந்த முதலீட் டாளர்களை சேலம் உருக்காலை ஊழி யர்கள் உள்ளே விட அனுமதிக்காமல் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வந்ததன் விளைவாக ஒப்பந்தம் கோர முதலீட்டாளர்கள் முன் வரவில்லை. தற்போது சேலம் உருக்காலை தனி யார்மய நடவடிக்கை குறித்த ஒன்றிய  நிதி அமைச்சகத்தின் நடவடிக்கை களை ரத்து செய்யப்பட்டதை, நாடா ளுமன்றத்தில் ஒன்றிய அரசு அறி விக்க வேண்டும் என மத்திய  தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியு ள்ளன.

சிஐடியு

இதுகுறித்து உருக்காலை தொழி லாளர் சங்க சிஐடியு பொதுச்செ யலாளர் சுரேஷ்குமார் கூறுகையில், ஒன்றிய அரசு ஏல நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்தாலும், நாடா ளுமன்றத்தில் இந்த கொள்கை ரீதி யான முடிவினை முழுவதுமாக கைவி டுவதாக அறிவிக்க வேண்டும். ஆலையை லாபத்தில் நடத்திட பல் வேறு முதலீடுகள், புதிய தொழிலா ளர்கள் சேர்ப்பு உள்ளிட்ட ஆக்கப்பூர்வ மான நடவடிக்கை திட்டங்கள் அறி விக்க வேண்டும். மாறாக, தேர்தல்  காலத்து நடவடிக்கையாக இருக்கும்  பட்சத்தில் இது தமிழக தொழில்து றைக்கு எந்தவித லாபமும் தராது. எனவே, மேற்கண்ட நடவடிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் அறி விக்க வேண்டும். அதற்கான முயற்சி களை தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும், என்றார்.

எல்பிஎப்

சேலம் உருக்காலை நவரத்தின அந்தஸ்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். சேலம்  ஸ்டீல் உலகளவில் பிரசித்தி பெற்ற  ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக  மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாத் திரங்கள் முதல் பெரிய தொழிற்சாலை பொருட்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட சந்திரயான், சேலம் உருக்காலை மூலம் தயாரிக்கப்பட்ட ஸ்டீலால் செய்யப்பட்டது. உலக பொருளாதா ரத்தை உயர்த்தும் அளவிற்கு சேலம்  ஸ்டீல் மிக முக்கியத்துவம் வாய்ந்த தாக உள்ளது. ஒன்றிய அரசு தனியார்  மயம் இல்லை என்ற அறிவிப்பை அரசு  இதழில் வெளியிட வேண்டும். தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமா கவே செயல்பட நடவடிக்கை எடுக்க  வேண்டும், என எல்பிஎப் பொதுச்செ யலாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ஐஎன்டியுசி


மேலும், ஐஎன்டியுசி பொதுச்செ யலாளர் இளங்கோ கூறுகையில், ஒன்றிய அரசு சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் திட்டத்தை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒன்றுபட்ட தொழிலாளர்களின் போராட்டத்தால் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு மற்றும் உரிய நிதி வழங்காததால் சேலம் உருக்காலையில் பாதிப்பு இருந்தது. தொழிலாளர்களின் விடாமுயற்சியின் காரணத்தால் தற்போது உற்பத்தி லாபத்தில் இயங்கி வருகிறது. ஒன்றிய அரசு சேலம் உருக்காலைகள்கு கூடுதல் நிதி ஒதுக்கி, போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும், என்றார். இதேபோல நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு சேலம் உருக்காலையை தனியார்மயப்படுத்த மாட்டோம் என  அறிவிக்க வேண்டும் என அண்ணா தொழிற்சங்க நிர்வாகி பிரசன்ன மாத வன், எல்எல்எப் நிர்வாகி கே.ரவிச் சந்திரன், பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் எஸ்.முருகன் ஆகி யோரும் தெரிவித்தனர்.

 -எழில்