ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு
ஏற்காடு மலைப்பாதையில் வியாழ னன்று பெரிய மரம் விழுந்ததால் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது. ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந் தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்ற னர். குறிப்பாக, கோடை விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஏற்காட்டில் கூட்டம் அலைமோதும். இதுதவிர, மே மாதம் நடை பெறும் கோடை விழாவிலும் ஏராளமான மக் கள் பங்கேற்று விழாவைக் கண்டுகளிப்பது டன் இயற்கை அழகையும் ரசித்து மகிழ்வர். தற்போது ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள தால், கடந்த வெள்ளியன்று முதல் ஏற்காட் டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஏற் காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே செல்கின்றன. இந்நிலையில், ஏற்காடு மலைப்பாதையின் 8 ஆவது கொண்டை ஊசி வளைவில் வியாழனன்று காலை வனப் பகுதியில் உள்ள பெரிய மரம் மற்றும் கொடி கள் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக் குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற் காடு காவல் துறையினர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையி னர், வனத்துறையினர் மரங்களை அப்புறப் படுத்தினர். நல்வாய்ப்பாக மரம் விழுந்த போது, வாகனங்கள் வராததால் அசம்பா விதம் எதுவும் ஏற்படவில்லை.