சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பத்திற்கு மிரட்டல் நடவடிக்கை எடுக்காத போலீசைக் கண்டித்து போராட்டம்
நாமக்கல், ஏப்.20- சுதந்திரப் போராட்ட வீரரின் குடும் பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரை கண்டித்து, உண்ணாவி ரதப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டி கிராமம், கெங்காரபாளையத்தைச் சேர்ந்த செல் லமுத்து என்பவர் சுந்திரப் போராட்ட வீரர். இவரது தோட்டத்தின் அருகி லுள்ள அருண்குமார் (22) என்பவர், கடந்த மார்ச் 25 ஆம் தேதியன்று செல்ல முத்து மற்றும் அவரது மகனான வழக்க றிஞர் செந்தில்குமார் ஆகிய இருவரை யும் கொலை மிரட்டல் விடுத்து தாக்கு தல் நடத்த முற்பட்டார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி காவல் நிலை யத்தில் புகாரளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனைக் கண்டித்து, சனி யன்று செல்லமுத்து-வின் குடும்பத்தி னர், உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலக வுண்டம்பட்டி காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் ரசீது மட்டும் வழங்கி விட்டு, எப்ஐஆர் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், சம்பந் தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பத்திற்கு பாது காப்பு வழங்க வேண்டும், என வலியு றுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல றிந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.