tamilnadu

img

வீட்டுமனை கேட்ட விதொச போராட்டம் வெற்றி!

வீட்டுமனை கேட்ட விதொச போராட்டம் வெற்றி!

ஈரோடு, ஜூன் 2- வீட்டுமனை கேட்டு விதொச போராட்டம் அறிவித்த நிலையில், அதிகாரிகள் இரண்டு மாத கால அவகாசத்தில் 27 பேருக்கும் பட்டா  வழங்குவது என்று உறுதி அளிக் கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி வட் டம், ஆப்பக்கூடல் கிராமம் சர்வே எண்: 629/5 இல் ஏழை எளிய மக்கள் 27 குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். சுமார் 30 வருடங்களாக குடியி ருந்து வரும் இவர்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த பத்தாண்டுகளாக வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என தொடர்ந்து மனு கொடுத்து வந்தனர். ஆனால் குடியிருக்கும் இடம் ஆற்றுப் புறம்போக்கு பட்டா  வழங்க இயலாது என்று தவறான தகவலையே கூறி வந்தனர்.  இந்நிலையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங் கத்தினர் அங்கு குடியிருக்கும் குடி யிருப்பு வாசிகளை திரட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என  முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் அனுமதி கேட்ட போது ஆப்பக் கூடல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று மறுக்கப்பட்டது. ஆயினும் அப் பகுதி மக்கள் ஒன்று திரண்டு வீட்டு  மனை பட்டா வழங்க வேண்டும். குடி யிருக்கும் இடம் ஆற்றுப் புறம் போக்கு அல்ல; அது நத்தம் புறம் போக்கு என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காகத்தான் இந்த  போராட்டம். எனவே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானித்தனர்.  இந்நிலையில் உடனடியாக வட் டாட்சியர் தலையிட்டு சர்வேயரை அனுப்பி வைத்தார். அவர் 629/5 இல் உள்ள நிலங்கள் அனைத்தும் அளந்து அவைகள் எல்லாம் நத்தம் புறம்போக்கில் உள்ளது என்றார். மேலும், பட்டா வழங்கலாம் என் றும், குடியிருக்கும் இடம் ஓடை  புறம்போக்கு அல்ல என்பதை  உறுதி செய்தார். அத்துடன் எழுத் துப்பூர்வமாக வழங்கப்பட்டது. இரண்டு மாத கால அவகாசத்தில் 27 பேருக்கும் பட்டா வழங்குவது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட் டது. 14 ஆவது வார்டு கவுன்சிலர் கே.விஜயலட்சுமி தலைமையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் பி.பி.பழனிசாமி, தாலுகா செயலாளர் ஆர்.பிரகாஷ், சிஐடியு  தாலுகா செயலாளர் ஏ.ஜெகநாதன்,  விதொச தாலுகா செயலாளர் எஸ். மாணிக்கம், பி.தளிர்கொடி மற்றும் என்.சின்னுச்சாமி உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.