கோவையில் காவல்துறையினரை தடுத்து நிறுத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை விளாங்குறிச்சியில் உள்ள தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளியில் ஆர்.எஸ். எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடை பெற்று வருகின்றது. இம்முகாமையொட்டி பள்ளி வளாகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் ஏராளமா னோர் கூடியுள்ளனர். இந்த பயிற்சி முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் உட்பட பல்வேறு அமைப்புக ளைச் சேர்ந்தோர் இந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வெள்ளியன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் முற்றுகை போராட் டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பள்ளியின் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் பாது காப்பு ஏற்பாடுகளை பார்வையிட கோவை மாநகர காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன், ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெறும் பள்ளிக்கு வந் தார். அப்போது, பள்ளியின் முன்பு நின்றி ருந்த இந்துத்துவ அமைப்பினர் அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளு முள்ளுவில் துணை ஆணையர் ஜெயசந்திரன் நிலைதடுமாறினார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து துணை ஆணையர் ஜெயசந்திரன் அந்த இடத்தில் இருந்து கிளம்பிச் சென்றார். இதனால் அப்பகுதியிலிருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று போலீஸ் அதிகாரிகளை தடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகன், பாஜக பிரமுகர் காளிதாஸ் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.