ஒன்றுபட்ட கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் 72 பாளையங்களில் தளி என்ற ஊரில் எத்தலப்ப வம்சத்தினர் கோட்டைகள் கட்டி ஆண்டு வந்தனர். நல்லாறு அக்கா தங்கச்சி மலைக்கு மேற்கு, குடமுருட்டி சீத்தக் கல்லுக்கும் கிழக்கு தாளவாய்பேட்டை கரைக்கும் தெற்கு முதுவார் சீமை எல்லைக்கும் வடக்கு இந்தப் பகுதிகளுக் குட்பட்ட கிழமேல் பத்து நாளிகைகளிலும், தென் வடல் நாலு காத வழிகளையும் அளவுகளாகக் கொண்டு நான்கு பங்கு பூமிக்கும் பாளையக்காரராக நியமிக்கப்பட்டார். இதை அக்கால நாட்டுப்புற வழக்காறுகளில் கதைப் பாடல்கள் கூறுகின்றன. தளி எத்தலப்பனின் முன்னோர்கள் வல்லவர்களாக வும், எதிராளிகளைத் திணறடிக்கும் வல்லலைமை பெற்றி ருந்தனர். இதில் கடைசியாக ஆட்சி செய்த மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பன் மற்றும் அவரது சகோதரர் கும ராண்டி வெங்கிடுபதி எத்தலப்பன் ஆகியோர் ஆங்கிலே யர்களால் தூக்கிலிடப்பட்டனர். எத்தலப்பனை ஆங்கில வரலாற்று ஏடுகளில் ‘யாதுல்’ நாயக்கர் எனவும் ‘எட்டி’ நாயக் கர் எனவும் குறிப்பிடப்படுகிறது. இவர்கள் எதிரிகளுக்கு முன்னால் ஆயிரம் பேர் நிற்பது போலத்தோற்றம் ஏற்படுத்தி எதிரிகளை நிலைகுலையச் செய்வர். துப்பாக்கிக் குண்டுகள் தங்களின் மீது படாமல் செய்து குண்டுகளை வெடிக்கச் செய்வதில் வல்லவர்கள். அனைத்து சமுதாய மக்கள் மதிக்கும் வண்ணம் இறை வனுக்கு பூசை வழிபாடுகள் நடந்தேற நிலங்களை மானிய மாக வழங்கியுள்ளனர்.
தளி எத்தலப்பரின் குடும்பம்
எத்தலப்பன் தகப்பனார் பெயர் மலையாண்டி வெங்கி டபதி குலசேகர எத்தலப்பன். தாயார் பெயர் கமலத்தாய். மனைவி பெயர் வீரகாட்டம்மாள்.தளி பெரிய பாளையமா தலால் சிறிய பாளையங்கள் தளிக்கு வரிகள் செலுத்தி வந் தன. தளி யாதுல நாயக்கர், ஆங்கிலேயரை எதிர்ப்போரை தனது நண்பர்களாகக் கொண்டிருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, திப்பு சுல்தான், மைசூர் கிருஷ்ணப்ப நாயக்கர், விருப்பாச்சி கோபால நாயக்கர், மணப்பாறை இலட்சுமி நாயக்கர் கேரள வர்மன், துண்டாஜி வாக் முதலானோருடன் நேரடி தொடர்பு வைத்திருந்தார்.
தீபகற்பக் கூட்டணி
விருப்பாட்சி கோபால நாயக்கர், மணப்பாறை லட்சுமி நாயக்கர், தீரன் சின்னமலை, தளி எத்தலப்பர் மற்றும் முன் னணித் தலைவர்களுடன் தீபகற்பக் கூட்டணி அமைக்கப் பட்டது. இது 1801 ஜூன் 3 கோவைப் புரட்சியை அடிப் படையாகக்கொண்டது. இதற்கு தளி எத்தலப்பரே முன் னிலை வகித்தார். இது தளிஞ்சிக் காடுகளில் ஒத்திகையும் மேற்கொள்ளப் பட்டது. வடக்கிருந்து துண்டாஜி வாக்கின் வருகை தாமதமானதால் புரட்சித்திட்டம் தோல்வியடைந் தது. இதனை மறு முனையில் வெற்றிகரமாக இயக்க வைத்த பெருமை தளி எத்தலப்பரையே சாரும். முன்னணி படைவீரர்கள் அனைவரும் ஆங்கிலேயக் கம்பெனி வசம் சிக்கிக்கொண்ட நிலையில், தளி எத்தலப் பர் மட்டும் இறுதிவரையில் ஆங்கிலேயர் கைகளில் சிக் காமல் மறைவு வாழ்க்கையே மேற்கொண்டார். 1801 ஏப்ரல் 23 ஆம் நாள் ஆண்ட்ரோ கேதீசு எனும் ஆங்கிலேய அதி காரி தூக்கிலிட்ட பிறகும் கூட அவர் வெளியே வரவில்லை. செயல்படுத்துதல் மற்றும் செயல்பாடுகளிலும் தன் தீவிரத் தைச் சிறிதும் குறையாமல் குறைக்காமல் இறுதி வரைக்கும் எதிர்த்தே வாழ்ந்து மறைந்தார் தளி எத்தலப்பர்.
யாதுல (எட்டி) நாயக்கர் இந்த தீபகற்பக்கூட்டணி பல மான இயக்கமாக ஆகப்பாடுபட்டார். இவர் கன்னடப் போராளிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். மருது பாண்டியரும். கோபால் நாயக்கரும் தங்களின் புரட்சிக் குழுக்களை ஒரு பொதுவான அமைப்பில் இணைத்துக் கொண்டனர். இது போராளிகளின் ஒருங்கிணைப்பை அதி கரிக்கச் செய்தது. ஆங்கிலேயர் 1799 அக்டோபர் 16 ல் வீர பாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்டதை அறிந்த தளி யாதுல நாயக்கர் மிகவும் வருத்தப்பட்டார். அதற்கு பழி தீர்க்க பாளையங்கோட்டையில் சிறை வைக்கப்பட்டுள்ள ஊமைத்துரையையும், செவத்தையாவையும் விடுதலை செய்ய விருப்பாட்சி கோபால் நாயக்கருடன் ஆலோசனை செய்தார். இவர்கள் பாஞ்சாலங் குறிச்சிப் போராளிளுக்கு ஊமைத்துரையை விடுதலை செய்ய ஆதரவு அளித்த னர்.
திட்டமிடுதலும் செயல்படுதலும்
ஊமைத்துரை விடுதலை ஆன பிறகும், அவன் பாஞ் சாலங்குறிச்சியில் நடத்திய போருக்கு தளி யாதுல நாயக்கர் படை வீரர்களை அனுப்பி ஊமைத்துரைக்கு ஆதரவு அளித் தார். அதன் பிறகு தளி பகுதியில் போர் தொடருவதற்கான சூழ்நிலை ஏற்பட்டது. தளி அரண்மனைக்கு வந்து வரி கட்ட வேண்டும் என்று ஆணவத்துடன் கேட்ட ஆங்கிலேய அதி காரியைக் கைது செய்து தூக்கிலிடுமாறு ஆணையிட்டார். இதன் பிறகு 1801 ஏப்ரல் 9 ல் யாதுல நாயக்கர் தன்னை வந்து பார்க்குமாறு இன்னஸ் கூறிய போது யாதுல நாயக் கர் மறுத்துவிட்டார். அதன் பிறகு இன்னஸ் துரை கீழ்க் காணும் எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பினார். ‘கீழ்ப்படிதல் மூலமாக உங்களையும், உங்கள் குடும் பத்தாரையும் அழிவிலிருந்தும் அவமானத்திலிருந்தும் காப் பாற்றலாம். கீழ் படிய மறுத்தால் பேரழிவு ஏற்படும். உன் னுடைய பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் நன்கு யோசி. விழக்கூடிய ஒவ்வொரு சொட்டு ரத்தமும் உன் தலை யிலேயே விழும்’ என்றார்.
1801 ஏப்ரல் 12 ஆம் நாள் மாலையில் தளிப்போர் நடைபெற்றுள்ளது. தளிக்கோட்டை தகர்த்து நொறுக்கப் பட்டது. ஆனைமலைக் கோட்டைப் பகுதியில் இருந்த பிரைத் தலைமையில் போர் நடைபெற்றது. ஏப்ரல் 13 ல் புரட்சியாளர்கள் தங்கியிருந்த குன்றின் பகுதிகளைக் கண் டறிந்து அதன் அடிவாரத்தை அடைந்தான். யாதுல நாயக் கர் தலைமையில் ஆன புரட்சிப்படை எதிரிகளைத் தாக்கி யது. பித்தளையால் ஆன 3 பவுண்டு பீரங்கிகளுடன் புரட்சி யாளர்கள் தாக்கினர். இருப்பினும் யாதுல் நாயக்கரில் முயற்சிகள் ஆங்கிலேயர் முன் பயனற்றுப் போயின. இந்த வம்சாவழியில் வந்த மன்னர் கடைசி மன்னர் தான் தளி எத்தலப்பமன்னர். தளி எத்தலப்ப மன்னர் இவர் திப்புசுல்தானின் ஆலோசனையின் பேரில் ஆங்கிலேயப் படைகளை எதிர்க்கப் பட்டியலின தாழ்த்தப்பட்ட குடிக ளோடு இசுலாமிய படை வீரர்களையும் சேர்த்துக் கொண்டு மக்கள் படையையும் அறிவுசார்ந்த புரட்சிப்படையையும் உருவாக்கி உள்ளார். இந்திய விடுதலையில் 220 ஆண்டு களுக்கு முன்பே ஆண்ட்ரோ கேதீசு எனும் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்டு வீரத்தைப் பறைசாற்றியவர் தளி எத்தலப்ப மன்னர். அனைத்து சமூக மக்களையும் ஒன்றினைத்து வெள் ளையனை கதறவிட்ட வீரத்தலைமகன் எத்தலப்பரைப் போல பாசிச சக்திகளை விரட்ட அனைவரையும் ஒன்றி னைத்திட விடுதலை நாளில் சபதம் ஏற்போம்.
-மகாதேவன், உடுமலை.