ததீஒமு புதிய நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு, ஜூன் 26- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு நகர புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு நகர சிறப்பு பேரவைக் கூட்டம் தோழர் ஏஎம்.காதர் நினைவரங்கில் புதனன்று நடைபெற்றது. நகர தலைவர் ஓ.முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாதுரை தொடக்க உரையாற்றினார். மாவட் டப் பொருளாளர் சி.ஜோதிமணி வாழ்த்தி பேசினார். இக்கூட்டத்தில் புதிய நகரத் தலைவராக ஆர்.செந்தில் குமார், செயலாளராக வி.சுரேஷ்பாபு, பொருளாளராக கே.ரவிசந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி நிறைவுரையாற் றினார்.