tamilnadu

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

கோவை, ஜூன் 4- இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு களை ஈர்த்து தொழில் தொடங்குவதில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ் கிறது. என தமிழ்நாடு தொழில் துறை  அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதத் துடன் தெரிவித்தார். கோவை மாவட்டம், கருமத்தம் பட்டி அருகே இயங்கி வரும் IZF என்ற  தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் கட்டுமான மற்றும் ரயில்வே துறைக ளுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும்  புதிய உற்பத்தி ஆலை புதனன்று திறக் கப்பட்டது. சென்னையிலிருந்து காணொ லிக் காட்சி வாயிலாக பங்கேற்ற தமிழ் நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசுகையில், தமிழ்நாடு மற் றும் ஜெர்மன் தொழில் துறைகள் இணைந்து உயர்தர உற்பத்திப் பொருட் களை உருவாக்குவதிலும், புதிய முத லீடுகளை ஈர்ப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த உற்பத்திப் பொருட்களை உரு வாக்க கோவையை தேர்ந்தெடுத்தது முக்கியத்துவம் மட்டுமல்லாமல் பெரு மைக்குரியது. தமிழ்நாட்டில் நாட்டின்  43% உழைக்கும் சக்தி உள்ளது. வெளி நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ் நாடு, தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது, என்றார். முன்னதாக, இந் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.