பட்டா வழங்காத சர்வேயருக்கு கண்டனம்
நாமக்கல், ஜூன் 26- பட்டா வழங்காத சர்வே யரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தேங்காய், பழம் தட்டுடன் வட்டாட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட் டது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வர் சாந்தாதேவி. இவர் பத்தாண்டுகளாக பட்டா மாறுதலுக் காக, வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஜமாபந்திகளில் பல முறை மனுக்கள் அளித்தும், இவருடைய மனு மீது எந்த ஒரு நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறப் படுகிறது. மேலும், மனுவை தள்ளுபடி செய்வதாகவும், சர்வே யர் மற்றும் வட்டாட்சியர் அவர்கள் பலமுறை அலைக் கழிப்பதாகவும் கூறப்படுகிறுது. இதனால் பட்டா வழங்காத சர்வேயர், வட்டாட்சியரை பணிநீக்கம் செய்ய வேண்டும், என வலியுறுத்தி, சாந்தாதேவி மற்றும் சமூக ஆர்வலர்கள் புதனன்று சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தாம்பல தட்டில் தேங்காய் பழத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் அவர் களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.