tamilnadu

img

வரலாறு சொல்லிக்கொடுக்க பேராசிரியர் இல்லை

நாமக்கல், பிப்.8- வரலற்றுத்துறையில் நிரந்தர துறைத்தலைவரோ, இணை  பேராசிரியர்களோ இல்லாத  நிலையில், தற்காலிக பேராசி ரியரும் விடுவிக்கப்பட்டதால் மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந் துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் பயின்று  வருகின்றனர். கல்லூரியில் செயல் பட்டு வரும் வரலாற்று துறையில்  நிரந்தரமாக துறைத்தலைவர், இணைப்பேராசிரியர், உதவி பேரா சிரியர் இல்லாத நிலையில், பெற் றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக  தற்காலிக ஆசிரியர்கள் நியமிக் கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்பு  நடத்தி வந்தனர். இந்த சிறப்பு  ஆசிரியர்களும் தற்போது பணியில்  இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் வரலாற்று துறை மாண வர்களுக்கு வகுப்பு எடுக்கக் கூட  பேராசிரியர்கள் இல்லாத நிலை  உள்ளது. இந்திய மாணவர் சங்கத் தினர் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டும் தீர்வு ஏற்பட வில்லை.  இதுகுறித்து இந்திய மாணவர்  சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகை யில், வரலாற்றுத்துறையில் முத லாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் வகுப்பிற்கும் இதர துணை  பாடத்திற்கு மட்டுமே பேராசியர்கள்  வருகின்றனர். இதனால், வரலாறு  பாடம் நடத்த ஆள் இல்லாத நிலை  உள்ளது. இது ஒரு புறம் இருக்க  வரலாறு மூன்றாம் ஆண்டு மாண வர்கள்  இறுதி பருவ தேர்வை எதிர்கொள்ள காத்திருக்கும் சூழலில் இறுதி பருவத்திற்கான பாடம் நடத்த பேராசிரியர்கள்  இல்லாத நிலையில், பொறுப்பு  முதல்வரிடம் மாணவர்கள் கேட்ட  போது, முதலாமாண்டு, இரண்ட மாண்டு மாணவர்கள் கல்லூரி வரட்டும். மூன்றாம் ஆண்டு மாண வர்கள் 10 நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள், ஆசிரியர் வந்த வுடன் கல்லூரிக்கு வாருங்கள் என் கிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய மாணவர்  சங்கத்தின் அறிஞர் அண்ணா  அரசு கலை கல்லூரி கிளை சார்பாக  கல்லூரிமுதல்வரை சந்தித்து மனு  கொடுக்க சென்றோம். அவர்  அங்கு இல்லாததால், பொறுப்பு வகித்த பேராசிரியரிடம் கோரிக்கை மனுக்களை அளித் தோம்.

முதல்வர் வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்றார். மாணவர் களும், தீர்வு கிடைத்த பிறகே களைந்து செல்கிறோம் என்றனர்.  பின்னர், 8 ஆம் தேதி விரிவுரை யாளர் தேர்வு நடைபெற்ற பிறகு, ஆசிரியர் வருவார்கள் என்றனர். அது வரை என்ன செய்வது என  கேட்டால், அதுவரை விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என் கின்றனர். 10  நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்கள். மாற்று ஏற்பாடு செய்வதற்கு பதிலாக விடுப்பு எடுக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. ஆகவே விடுப்பு கொடுக்கப்பட்ட மாணவர்களை கல்லூரிக்கு வர  வழைத்து அவர்கள் கற்றலுக்கு வகை செய்திட வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. மேலும், உடனடி யாக வரலாற்று துறைதலைவர், பேரசியர்களை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம். தீர்வு கிடைக்க வில்லை என்றால் அடுத்த கட்டமாக ஒட்டுமொத்த மாணவர்களையும் திரட்டி போராடுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை எச்சரித்திருக்கிறோம் என்றனர்.  முன்னதாக, இந்த கோரிக்கை மனுக்களை இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் ஒன்றிய செய லாளர் பி.கோகுல், கிளை நிர்வா கிகள் நந்திஸ் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திடம் அளித்தனர்.