ரூ.20 ஆயிரம் செலவு செய்து, கிலோ ரூ.6க்கு விலை நிர்ணயம்
இடைத்தரகர்களால் பாதிக்கப்படும் மா விவசாயிகள்!
தருமபுரி, மே 30- ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்து, மாங்காய்களை கிலோ ரூ.6க்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்வ தால் மா விவசாயிகள் பாதிக்கப்படுவ தாக, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் முறையிட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெளியன்று, ஆட்சியர் ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் ஆட்சியரிடம் மனு அளித்து பேசி னர். அதில், தருமபுரி மாவட்டம் முழுவ தும் மா சாகுபடி பரவலாக செய்யப்படுகி றது. குறிப்பாக பாலக்கோடு, காரிமங்க லம் வட்டங்களில் அதிகமாக மேற் கொள்ளப்படுகிறது. 10 ஆயிரம் குடும் பத்திற்கு மேல் 20 ஆயிரம் ஏக்கர் நிலத் தில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. பாலக்கோடு வட்டத்தில் விராசனூர் மல் லுப்பட்டி போடர் அள்ளி, மதகிரி மார வாடி குண்டாங்காடு, நீலகிரி கொட்டாய் கண்டகபைல்கதிரம்பட்டி, போன்ற பல் வேறு குக்கிராமத்தில் மாமர தோப்புகள் உள்ளன. மாமரங்கள் தை மாதத்தில் பூ பூக்க ஆரம்பித்ததும், பூச்சி மருந்து மூன்று முறை அடிக்க வேண்டும். அதற் கான இடுபொருட்களின் விலை அதி கரித்துள்ளது. உழவு வேலைக்கான கூலி, மற்ற செலவினங்கள் உள்ளிட்ட பராமரிப்பு, விவசாய சாகுபடிக்கான செலவு என, ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயி ரம் வரை செலவாகிறது. சரியாக மா அறு வடை சித்திரை மாதம் தொடங்கி வைகாசி வரை நடைபெறுகிறது. அறுவடை செய்த மாங்காய் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஜூஸ் தொழிற்சா லைகளுக்கும் இடைத்தரகர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இன்னும் ஒரு பகுதி மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனையாகின்றது. இந்நிலையில், விற்பனையில் விவ சாயிகளுக்கு கட்டுபடியான நியாய விலை கிடைக்க வாய்ப்பு குறைவாக உள் ளதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற னர். தற்போது மா அறுவடை நடை பெற்று, கிலோவுக்கு ரூ.6 என்ற குறை வான விலைக்கு இடைத்தரகர்கள் கொள் முதல் செய்கின்றனர். விவசாயிகள் விளைவித்த மாங்காய் உற்பத்தி செலவு கூடுதலாக இருக்கிற நிலையில், இவ்வ ளவு குறைவான விலை கொள்முதல் செய்வது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையளிக்கிற விஷயமாகும். அதற்குமேல் விலை தர மாட்டோம் எனக் கூறி இடைத்தரகர்களும், ஜூஸ் பேக்டரி முதலாளிகளும் மாங்காயை கொள்மு தல் செய்யாததால், மரத்திலேயே மாங் காய் அழுகும் சூழல் ஏற்படுகிறது. விவ சாயிகள் விளைவித்த மா கிலோ ஒன் றுக்கு தரத்தை பொறுத்து ரூ.20லிருந்து ரூ.25 வரை விலை கிடைத்தால் விவசாயி களை இந்த பெரும் நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு உதவிகரமாக இருக் கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகி றோம். எனவே, விவசாயிகளின் நெருக்கடி தீர, குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க விவசாய பிரதிநிதிகள், ஜூஸ் பேக்டரி முதலாளிகள் அரசு அதிகாரிகள், கொண்ட முத்தரப்பு கூட்டத்தை நடத்தி, விலை நிர்ணய கொள்கையை உரு வாக்க வேண்டும். கொள்முதல் விலை கிடைக்காமல் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்ச நிவார ணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், மாவட்ட துணைத்தலைவர் கே.என்.மல்லை யன், பாலக்கோடு வட்டத் தலைவர் ஜி.நக்கீரன், வட்டச் செயலாளர் முருகன், நிர்வாகிகள், சின்னமாதையன், ஆனந் தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.