tamilnadu

img

சிபிஎம் மூத்த தலைவர் தோழர் கே.சி.கருணாகரன் மறைவு...

கோவை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் கே.சி.கருணாகரன் வெள்ளியன்று காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டமுன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், சிங்காநல்லூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர் கே.சி.கருணாகரன் வெள்ளியன்று இரவு காலமானார். இவரது உடல்கோவை உப்பிலிய பாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் கோவை மாவட் டக்குழு அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இங்குகோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக் குமார், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மதிமுக நிர்வாகி தேவசேனாதிபதி, சிபிஎம் மாநிலக்குழு உறுப் பினர்கள் கே.காமராஜ், ஆர்.பத்ரி, திருப்பூர் மாவட்டச்செயலாளர் செ.முத்துக்கண் ணன், எம்.கண்ணன், ஏ.ராதிகா, மூத்த தோழர்கள் யு.கே.வெள்ளிங்கிரி, என்.வி.தாமோதரன், சிஐடியு மாவட்ட தலைவர்கள் சி.பத்மநாபன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.வேலுசாமி, தீக்கதிர் கோவைபதிப்பு மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.ராஜா மற்றும் ஊழியர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், தொழிற்சங்க தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

இதனையடுத்து பாப்பநாயக்கன்பாளையம் மின்மயானம் வரை நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்வலம் நடைபெற் றது. இதைத்தொடர்ந்து அங்குநடைபெற்ற இரங்கல் கூட் டத்திற்கு சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார். திமுக கோவைமேற்கு மாவட்ட பொறுப் பாளர் பையாகவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி நந்தகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், சிபிஎம் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பி
னர் கே.துரைராஜ், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் கோவை ரவிக் குமார், திராவிட தமிழர் கட்சியின் வெண்மணி, திராவிடர் கழகத்தின் தலைவர் நேருதாஸ் ஆகியோர் பங்கேற்று இரங்கல் உரையாற்றினர். 

மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு
தோழர் கே.சி.கருணாகரன் மறைவையொட்டி கோவை மாவட்டத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகளைஅரை கம்பத்தில் பறக்க விடுவது என்றும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் மூன்றுநாட்கள் ஒத்திவைப்படுகின்றன என்றும் கோவை மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

குடும்பத்தாருக்கு இரங்கல்
தோழர் கே.சி.கருணாகரன் மறைவையடுத்து அவரது குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட தலைவர் கள் இரங்கல்தெரிவித்தனர்.