tamilnadu

img

அன்னூர் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித்தரக் கோரிக்கை

அன்னூர் அங்கன்வாடி மையத்துக்கு  புதிய கட்டடம் கட்டித்தரக் கோரிக்கை

அன்னூர், ஜூன் 20– அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட அ.குமாரபாளையத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்தின் கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என பெற் றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட இந்த  அங்கன்வாடி மையத்தில் 2 முதல் 6 வயது வரையிலான 33 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு சத்து மாவு உள்ளிட்ட சத்தான உணவுப் பொருட்கள் வழங்கப் படுகின்றன. ஆனால், 30 ஆண்டுகளுக்கு மேலான இந்தக் கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்து, சிமென்ட் காரைகள்  உதிர்ந்து விழுகின்றன. தரைத்தளம், சுவர்கள், ஓடுகள் என  அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதுகுறித்து கோவை  மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் அளிக்கப்பட்ட போதி லும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப பெற் றோர்கள் அச்சமடைந்துள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்விக்காக அரசு உடனடியாக புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.