மழை பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரிக்கை
கோவை, மே 30– கோவையில் மழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவார ணம் வழங்க வேண்டும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத் துள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர், தலை மையில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் மோ.ஷர்மிளா, கூட்டுறவு சங்கங் களின் மண்டல இணைப்பதிவாளர் அழ கிரி, இணை இயக்குநர் வேளாண்மை கிருஷ்ணவேணி, வருவாய் கோட்டாட் சியர் ராம்குமார், கோவிந்தன், அரசு துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தங்கள் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் தெரிவித் தனர். குறிப்பாக தென்னையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும், வெள்ளை ஈ மற்றும் கேரளா வேர் வாடல் தாக்கு தலை தடுக்கும் பொருட்டு அரசின் திட் டங்கள் மூலம் மானியம் வழங்க வேண் டும், சூறாவளி காற்றினால் சேதம டைந்த வாழைக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நீர் வழிப்பாதையிலுள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத் தின் மூலம் குளம், குட்டைகளை தூர்வாருமாறும், கொப்பரை தேங்கா விற்கு ஊக்க தொகை வழங்கிடவும், சாலையோரங்களிலுள்ள முட்புதர் களை அகற்றவும், தென்னை நார் கழி வுகள் மூலம் நிலத்தடி நீர் மாசுபடு வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மேலும், காட்டு பன்றி தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும், குட்டை ஆக் கிரமிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நொய்யல், கௌசிகா நதி மற்றும் பவானி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், நில அபகரிப்பு களை தடுக்க நடவடிக்கை எடுக்கு மாறு விவசாயிகள் கோரிக்கை விடுத் தனர்.