சென்னை மாநகராட்சி தவிர்த்த உள்ளாட்சிகளில் 20 வகையான நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்கும் (அவுட்சோர்சிங்) வகையில் தமிழக அரசு அரசாணை 152ஐ வெளியிட்டுள்ளதை எதிர்த்தும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் 20 மாநகராட்சிகளிலும் செவ்வாயன்று (நவ.22) சிஐடியு தொழிலாளர் சங்கம் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.