விரட்டி கடித்த வெறிநாய்: 10 பேர் காயம்
மேட்டுப்பாளையம், மே 30– மேட்டுப்பாளைத்தில் சாலையில் நடந்து சென்றவர்களை விரட்டி விரட்டி வெறிநாய் கடித்த சம்பவத்தில் காயம டைந்த10 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட் பட்ட காட்டூர் மணி நகர் பகுதியில் தெரு நாய் ஒன்று பொது மக்களை விரட்டிக் கொண்டு இருந்தது. சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை அந்த நாய் விரட்டிக் கொண்டிருந்த நிலையில் திடீரென கடிக்க தொடங்கியது. வெறிநாயாக இருந்தது தெரியாமல் பொது மக்கள் அவ்வழியே நடந்து சென்ற போது அந்த நாய் ஆண்கள் பெண்கள் என அனைவரையும் விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில் கால், கை என பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு 10 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்முறையாக மலைப்பயிர்கள் கண்காட்சி
நீலகிரி, மே 30- நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக மலைப்பயிர்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், பாரம்பரிய கிராமிய வாழ்க் கையை சித்தரித்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது, பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம், தனது பல் வேறு சிறப்பம்சங்களுடன் சுற்றுலாப் பயணிகளையும் பொதுமக்களையும் மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை மூலம் பல்வேறு காட்சிகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்தின் மற்றொரு மகுடமாக, முதன்முறையாக மலைப்பயிர்கள் கண் காட்சி வெள்ளியன்று காட்டேரி பூங்காவில் மாவட்ட ஆட்சி யர் முன்னிலையில் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப் பட்டது. இந்த முதல் மலைப்பயிர்கள் காட்சியின் சிறப்பம்சமாக, தமிழர்களின் தொன்மையான வாழ்வைப் பறைசாற்றும் விதமாக ஒரு முழுமையான கிராமப்புற வாழ்க்கை தத்ரூ பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேயிலை, காப்பி, வெற் றிலை, முந்திரி, தென்னை, பனை, கோகோ, எண்ணெய் பனை, பாக்கு, மற்றும் நுங்கு எனப் பத்து வகை மலைப் பயிர்களைக் கொண்டு, தமிழ்நாட்டு கிராமப்புற மக்களின் குடிசை வீடு கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. குடிசை வீட்டின் முன் ஆடு, கோழி, கன்றுகுட்டி, அம்மி கல், ஆட்டுகல், உரல், பனைமரம் போன்ற உருவ அமைப்பு கள் நம் தமிழ் கலாசாரத்தையும், அன்றாட வாழ்வையும் பிரதிபலிக்கும் வகையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள் ளன. மேலும், அக்காலத்தில் நம் முன்னோர்கள் விளையாடிய நுங்கு வண்டி மற்றும் சறுக்கு விளையாட்டு போன்ற பாரம் பரிய விளையாட்டுகளும் காட்சிப்படுத்தப்பட்டு பார்வையா ளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த மலைப்பயிர்கள் காட்சியினை முன்னிட்டு, தேயிலை பயிரிடும் விவசாயிகளுக்கென பிரத்யேகமாக நான்கு பிரிவு களில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டிக ளில் வெற்றி பெறுபவர்களுக்கு கண்காட்சியின் நிறைவு நாளான ஜூன் 1 அன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்த மலைப்பயிர்கள் கண்காட்சி ஜூன் 1ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த அரசுப்பள்ளி மாணவர்கள்
நாமக்கல், மே 30- குமாரபாளையத்தில் அரசு சார் பில் நடத்தப்பட்ட மாநில அளவி லான யோகா போட்டிகளில், அர சுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்க முடியாமல், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு களை இழக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்திலள்ள தனியார் கல் லூரியில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான யோகா போட்டி வியாழனன்று நடை பெற்றது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர், தேசிய அள விலான போட்டியில் பங்கேற்கவுள் ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால், அரசுப்பள்ளி மாணவர் களுக்கு சரியான முறையில் தகவல் தர முடியாமல், மாநில அளவிலான போட்டியில் சுமார் 120 மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். குமாரபாளையத்தில் நடைபெறும் இப்போட்டியில், அதேபகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட பங்கேற்க முடிய வில்லை. இதுகுறித்து இந்திய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலர் அரவிந்த் என்பவர் கூறுகையில், அந்தந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கள், தங்கள் பள்ளி மாணவ, மாண வியர்களுக்கு தகவல் கொடுத்தி ருக்க வேண்டும். ஆனால், தகவல் தராததால், அவர்களால் பங்கேற்க முடியாமல், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை யும் இழந்துள்ளனர். இதுபோன்ற அறிவிப்புகளை ஒன்றிய அரசு அதிகாரிகள், கோடை விடுமுறைக்கு முன்பு கொடுத்திருந்தால், பெரு மளவிலான மாணவ, மாணவியர் பங்கேற்றிருப்பார்கள். தேசிய அள விலான போட்டிகளில் பங்கேற்க, பெயர்களை பதிவு செய்திட மே 31, என்பதால், அவசர கதியில் இப்போட் டிகள் நடத்தப்பட்டன. இனி வரும் காலங்களில், கோடை விடுமு றைக்கு முன்பே தகவல் கொடுத்து, மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
பாரதியார் பல்கலை., விரிவாக்க மையத்தை மூடுவதா?
மாணவர், வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஈரோடு, மே 30 – பாரதியார் பல்கலைக்கழகத் தின் முதுநிலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தை மூடும் முடி வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட் டில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையம், இப்பகுதி மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான முக்கிய மைய மாக திகழ்கிறது. இந்நிலையில், இந்த மையத்தை மூடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கையானது, மாண வர்களின் எதிர்காலத்தை கேள் விக்குறியாக்கும் என மாணவர் சங் கம் மற்றும் வாலிபர் சங்கம் விமர் சித்துள்ளது. பாரதியார் பல்கலைக் கழகத்தின் இந்நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட் டம், சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாணவர் சங்க மாவட்டத் தலைவர் த.நவீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பிரவீன் குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் வி.ஏ.விஸ்வநாதன் மற்றும் நிர் வாகிகள் பி.அன்புஜனாதிபதி, எம்.லோகநாதன் உள்ளிட்ட திராளா னோர் பங்கேற்றனர்.