tamilnadu

img

மதுபானக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

மதுபானக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

பள்ளிபாளையம் அருகே மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள கண்டிப்புதூர், ஈரோடு - சேலம் தேசிய நெடுஞ்சாலை மையப்பகுதி யில் உயர்ரக ஏசி மதுபானக் கடைக்கான கட்டுமானப் பணிகள் கடந்த சில  தினங்களாக நடைபெற்று, தற்போது பணி கள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. நகரின்  மையப்பகுதியில் மதுபானக்கூடம் வர உள் ளதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். குடியிருப்பு  பகுதி  அருகே மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரி வித்து, அப்பகுதி பொதுமக்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட  ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இருப் பினும், மதுபானக்கடை திறப்பு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருப்பதை அறிந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவெ டுத்தனர். அந்த பார் உரிமையாளர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவ ருக்கு ஆளும் அரசியல் கட்சியில் பின்புலம்  உள்ளதால் நடவடிக்கை எடுக்க அதிகாரி கள் தயங்குவதாகக் குற்றஞ்சாட்டி, அப் பகுதி பொதுமக்கள் சனியன்று மாலை  போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானக்கடை யின் முன்பு கண்களில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு, மதுபானக்கடையை மூட வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் காவல் துறையினர், பொதுமக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். ‘இப்பகுதியில் மது பானக்கடை அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக’ மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து, உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார்  தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை  கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்ற னர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பள்ளிபாளையம் நகராட்சி 5 மற்றும் 13 ஆவது வார்டு பகுதிகளில் 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் இப்பகுதியில் அதிகளவில் நடைபெற்று வரும் நிலையில், கொள்ளை சம்பவங்களுக்கு வழி வகுக்கும் வகையில், மதுபானக்கடை திறக்கப்படவுள்ளது. இக் கடை திறக்கப்பட்டால் 3 தனியார் மருத்துவ மனைகளுக்கு நோயாளிகள் செல்ல முடி யாத நிலையும், பள்ளி குழந்தைகள் மற் றும் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே, மேற்படி  இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து, மது பானக்கடை நடத்த உரிமம் வழங்காமல்  தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென் றால் அடுத்த கட்டமாக சாலை மறியலில் ஈடு படுவோம், என்றனர்.