மாதர் சங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம்
தேர்வு எழுத வாசலில் அமரவைத்த சம்பவம்
மாதவிடாயை காரணம் காட்டி, வாசலில் அமர வைத்து மாணவியை தேர்வு எழுத வைத்த தனியார் பள் ளியைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமை யில் அனைத்து அரசியல் சமூக இயக் கங்கள் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ‘ஆண் பெண் இருவரும் சமம்’ என்று போதிக்கிற கல்வி நிலையங் களில் கூட இது மாதிரி பாகுபாடு என்பது எந்த விதத்திலும் அனும திக்க முடியாது. எனவே தமிழக அர சின் கல்வித்துறை அந்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தனியார் பள்ளிகளிலும் குறை தீர்வு மையம் உருவாக்க வேண்டும். தனி யார் பள்ளிகளில் பாத பூஜை போன்ற நிகழ்வுகளை தடுத்தும் விதி மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று, பொள் ளாச்சி திருவள்ளுவர் திடலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சுதா தலைமையில் அனைத்து அரசியல் சமூக இயக்கங்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் மூ. அன்பரசன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜி.உஷா, தாலுகா தலைவர் விஜயா, செயலாளர் என். ரேவதி, பொருளாளர் சித்ரா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜூல்பி மற்றும் மற்றும் இந்திய கம் யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தந்தை பெரி யார் திராவிடர் கழகம், அம்பேத்கர் மக்கள் இயக்கம், மஜக உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அணைகள் நிலவரம் பவானிசாகர் அணை நீர்மட்டம்:75.27/105அடி நீர்வரத்து:122கனஅடி நீர்திறப்பு:700கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:46.82/72அடி நீர்வரத்து:39கனஅடி நீர்திறப்பு:1070கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:1.98/160அடி நீர்வரத்து:9.96கனஅடி நீர்திறப்பு:9.96கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:63.95/120அடி நீர்வரத்து:258கனஅடி நீர்திறப்பு:194கனஅடி