சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
நாமக்கல், மே 10- மோகனூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து, அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பயிர்களுடன் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளை யப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண் டுள்ளது. இத்திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரி வித்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சனியன்று நாமக் கல்லில் விவசாயிகள், பொதுமக்கள் நெற்கதிர் மற்றும் கடலை பயிரை கையில் ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், வளை யபட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் வேண்டாம் என, கடந்த இரண்டரை ஆண்டுகளாக போராடி வருகின் றோம். மேலும், 111 முறை அறவழிப் போராட்டங்களை நடத்தி யுள்ளோம். அதிகாரிகள் விளை நிலங்களை தரிசு என்று தவ றான தகவல்களை அனுப்பியுள்ளனர். சிப்காட் திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்த தகவல்களை முதல் வருக்கு தெரியப்படுத்தாமல், மாவட்ட நிர்வாகத்தினர் மறைக் கின்றனர். இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண் டும், என்றனர்.
மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவருக்கு கல்வி அமைச்சர் பாராட்டு
நாமக்கல், மே 10- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி கூலி தொழிலாளர்களின் மகன் அர்ஜுன் என்பவர், பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் அமைந் துள்ள எஸ்பிபி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 597 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பி னர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், உயர் கல்வி கற்பதற்கு தேவையான உதவிகளை செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாக, மாணவர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி, மே 10- மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக - கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகே னக்கலுக்கு நீர்வரத்து குறை வதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. அதன் படி, வெள்ளியன்று ஒகேனக் கலுக்கு நீர்வரத்து 1200 கன அடியாக இருந்த நிலை யில், சனியன்று காலை நிலவ ரப்படி நீர்வரத்து 1500 கன அடியாக அதிகரித்தது. இத னால் மெயின் அருவி, ஐந்த ருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டியது. சுற்று லாப் பயணிகள் குடும்பத்து டன் பரிசல் பயணம் மேற் கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும், தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைக ளுக்கு நடுவே விழும் தண் ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். இதன்பின் மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை பிலிகுண்டுலு வில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர்.