tamilnadu

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்வை  கண்டித்து திருப்பூரில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன்  தலைமையில் அங்கேரிபாளையத்தில் ஞாயி றன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை சுட்டிக்காட்டிப் பேசினார். வடக்கு  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ.சந்தோஷ்கு மார், பி.நரேந்திரபிரசாத், அவிநாசிக வுண்டம்பாளையம் கிளைச் செயலாளர் பி. கதிர்வேல், அங்கேரிபாளையம் கிளைச் செய லாளர் என்.மனோகரன், வெங்கமேடு கிளைச்  செயலாளர் காளீஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாதர் சங்கம்: இதேபோல் ரங்கநாதபுரம் பேருந்து நிறுத் தம் அருகில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வேலம்பாளையம் நகரக் குழு சார் பில் சனியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நகரக்குழு உறுப்பினர் கௌசல்யா  தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ர. கவிதா, நகரத் துணைத் தலைவர் ப.செல்வி,  நகரப் பொருளாளர் சாந்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நகரக் குழு உறுப்பினர் ப.சின்னச் சாமி உள்ளிட்டோர் ஒன்றிய அரசை கண்டித்து  பேசினர். முன்னதாக, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, சுற்றி வந்து கும்மியடித்து எதிர்ப்பை தெரிவித்த னர்.  அவிநாசி: சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரு முருகன்பூண்டி நகராட்சி கிளைகள் சார்பி லும், அனைத்திந்திய இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜனநாயக மாதர் சங்கம்  அவிநாசி ஒன்றிய தலைவர் ஆர்.சித்ரா,  ஒன்றிய செயலாளர் செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஈஸ்வ ரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பால சுப்பிரமணியம், தேவி, வையாபுரி, திருமு ருகன் பூண்டி நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரம ணியம், தமுஎகச திருமுருகன் பூண்டி ஒருங் கிணைப்பாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தெற்கு ஒன்றியம்:  அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தினர் திருப்பூர் தெற்கு ஒன்றியம் கல் லாங்காட்டில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாதர் சங்க நிர்வாகி ஜோதி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ஒன்றியத் தலைவர் லட்சுமி, பாக்கியம்  உள்ளிட்டோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம் வாழ்த்திப் பேசினார். இதில் 40க் கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொன்ட னர்.