tamilnadu

img

நெருக்கடியின் சுமையில் சிக்கி தவிக்கும் பவர் டேபிள் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் - ஆர்.நந்தகோபால்

வரும் பிப்ரவரி 14 அன்று நடைபெறும் சிறு,  குறு உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு மாநாட் டிற்கு பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக மாநாடு வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  இன்றைய நிலைமையில் இந்த மாநாடு அத்தியாவசியமாகிறது. ஏனென்றால், திருப்பூரி னுடைய தொழில் நிலைமை மிகவும் மந்தமாக உள்ளது. இதற்கு எங்களுக்கு ஆர்டர்களை கொடுக்கும் நிறுவனத்தினர் கூறுகின்ற பதில் வியாபாரம் மிகவும் மந்தமாக உள்ளது. மக்கள் கையில் வாங்கும் சக்தி இல்லை. எனவே வியா பாரம் நடைபெறுவதில்லை. அதனால் ஆர்டர் கள் குறைவாக இருக்கின்றன என்று கூறுகி றார்கள். பொதுவாக எங்களுக்கு ஒரு சிறிய நிறு வனத்திற்கு வாரம் 2 ஆயிரம் டஜன்களை உற் பத்தி செய்ய கொடுப்பார்கள். இன்று 500 டஜ னில் இருந்து ஆயிரம் டஜனுக்குள்தான் தருகி றார்கள். இதற்கு நூல் விலை உயர்வும் ஒரு  காரணம். நூல் விலை உயர்வினால் பனியன் விலை அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் வாங்குவதில் சிரமப்படுகிறார்கள். அவசியத் தேவை என்றால் மட்டுமே உள்ளாடைகளை வாங்குகிறார்கள். மேலும் சமீபமாக மூன்று, நான்கு மாதங்களாக நூல் விலை குறைந்து கொண்டே வருகிறது. இப்பொழுது வியாபாரி கள் விலையை குறைவாக கேட்கிறார்கள். இன்னும் விலை குறையும் என்று எதிர்பார்ப்பில் புதிய ஆர்டரை தராமல், ஏற்கெனவே இருக் கின்ற பனியன் சரக்குகளை விற்பனை செய்ய லாம், பின்பு கொள்முதல் செய்து கொள்ள லாம் என்ற நிலைமையில் இருக்கிறார்கள். அத னால் இன்னமும் நிலைமை சீரடையாமல் இருக் கிறது. மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் ரூ.20 லட் சத்திற்குள் உற்பத்தி இருந்தால் ஜிஎஸ்டி தேவை யில்லை என்று அரசு கூறுகிறது. ஆனால் எங்க ளிடம் ஆர்டர் கொடுக்கக்கூடிய நிறுவனங்கள் பிராண்டட் நிறுவனங்களாக இருப்பதால், அவர்கள் ஜிஎஸ்டி பில் கண்டிப்பாக வேண்டும்

என்கிறார்கள். ஒரு சிலர் வேண்டாம் என்றாலும், வணிகவரித் துறை அதிகாரிகள் சோதனை என்ற  பெயரில், உற்பத்தி செய்யப்பட்ட பனியன் ஆடைகளை டெலிவரி செய்ய கொண்டு செல் லும்பொழுது சோதனை அடிப்படையில் அப ராதம் விதிக்கிறார்கள். அதனால் பனியன் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில்  இருந்து விலக்கு அளிக்க வேண்டும். எங்களு டைய பவர்டேபிள் நிறுவனங்களுடைய மிக  முக்கியமான பிரச்சனை, மின்சார கட்டணம்  அதிகரித்தது ஆகும். ஜாப் ஒர்க் நிறுவனங்க ளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பும் ஒரு காரணம். எனவே மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் இந்த மாநாட் டில் கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.  நூல் விலையை சீராக வைப்பதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் பருத்தி மேம்பாட்டு கழகத்தை உருவாக்கி ஸ்பின்னிங் மில்களுக்கு சீராக பஞ்சை விநியோகம் செய்ய வேண்டும். ஜாப்  ஒர்க் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு தர வேண்டும். மின்சார கட்ட ணத்தில் பவர்லூம் போல மானியம் வழங்க வேண்டும். 20 அல்லது 10 குதிரை மின்திறன் உள்ள நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். தொழிலாளர்க ளுக்கு தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே குடியிருப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.