tamilnadu

img

விசைத்தறியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!

விசைத்தறியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!

கூலி உயர்வு தொடர்பாக ஜவுளி உற்பத்தி யாளர்களுடன் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட் டங்களைச் சேர்ந்த விசைத்தறி உரிமையா ளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.  கடந்த 29 நாட்களாக நியாயமான கூலி  உயர்வை வலியுறுத்தி விசைத்தறி உரிமை யாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 5  நாட்களாக சோமனூர் பகுதியில் குடும்பத்தி னருடன் தொடர் உண்ணாவிரதப் போராட் டத்தையும் நடத்தினர். இவர்களின் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, செவ்வாயன்று விசைத்தறிகள் இயங்கும் பகு திகளில் கடைகள் முழுமையாக அடைக்கப் பட்டன. மேலும், மறுசுழற்சி பஞ்சாலைக ளும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டன. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சி யர் பவன்குமார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட் டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, விசைத்தறி உரிமையாளர்களின் தொடர்  உண்ணாவிரதப் போராட்டம் காலவரை யற்ற உண்ணாவிரதப் போராட்டமாக தீவிர மடைந்துள்ளது. செவ்வாயன்று இரவு முதல்  11 விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணா விரதப் பந்தலில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி யாளர்கள் இதுகுறித்து கூறுகையில், “கடந்த  28 நாட்களாக நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற் பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப் பந்தக் கூலியைக் குறைப்பதற்கு எதிர்ப்பு  தெரிவித்தே இந்தப் போராட்டம் நடைபெற்று  வருகிறது. மாநில அரசும், மாவட்ட நிர்வாக மும் உடனடியாகத் தலையிட்டு எங்களுக்கு நியாயமான கூலி உயர்வைப் பெற்றுத் தர வேண்டும். இல்லையெனில், எங்களது போராட்டம் மேலும் தீவிரமடையும்” என்று எச்சரித்தனர். தமிழக அரசு தங்களின் கோரிக்கை களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை  தொடர் போராட்டங்கள் நீடிக்கும் என்று  விசைத்தறி உரிமையாளர்கள் திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளனர்.