கூலி உயர்வு பெற்று தராவிட்டால் போராட்டம்: விசைத்தறி உரிமையாளர்கள் அறிவிப்பு
அவிநாசி, மே 30- தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு, ஒப்புகொண்ட கூலி உயர்வு பெற்று தராவிட் டால், அடுத்த கட்ட போராட் டங்கள் நடைபெறும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு அறிவித் துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க கூட்டமைப்பின் கூட்டம், தெக்கலூரி லுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள் ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். சோமனூர் பூபதி, அவி நாசி முத்துசாமி, கணக்கம்பாளையம் பாரதி, பெருமாநல்லூர் ராமசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், 2024 ஜனவரி முதல் கூலி உயர்வு கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதை தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக அமைச் சர்கள், தலைமையில் கோவை மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 15 சத விகிதம் வரை கூலி உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட் டது. ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் முழுமையாக கூலி உயர்வு வழங்கப்பட வில்லை. இதனால், விசைத்தறியாளர்க ளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு, ஒப்புகொண்ட கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும். இல்லையெனில், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவது, என முடிவு செய் யப்பட்டுள்ளது.