கோழிப்பண்ணையால் அவதி: மக்கள் போராட்டம்
கோவை, ஜூன் 26- கோழிப்பண்ணையை அகற்றக்கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, அதிகாரிகள் ஒரு வார காலத்திற்குள் நட வடிக்கை எடுப்பதாக உறு தியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்ட னர். கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பச்சார்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான தாய் கோழி பண்ணையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், தொடர் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கோழி பண்ணையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.