வெள்ளப்பெருக்கு, தொடர் மழையால் மூடப்பட்ட கோவை குற்றலாம் அருவி இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் இன்று திறக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான கோவை குற்றாலம் அருவியில் குளிக்கத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் கடந்த ஜூலை 27 ஆம் தேதி கோவை குற்றாலம் மூடப்பட்டது. அதன் பிறகு நீர் வரத்து குறைந்த போதும், பராமரிப்பு பணிக்காகத் தடை தொடர்ந்து வந்த நிலையில் மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கோவை குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் சிறுவாணி அணைப் பகுதிகளில் மழை பொழிவு இல்லாத காரணத்தால் கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் அளவு குறைந்து, நீர் வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இந்நிலையில் கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்படுவதாக போளுவாம்பட்டி சரக வனத்துறை அறிவித்தனர். இரண்டு மாதங்களுக்குப் பின் கோவை குற்றாலம் அருவி திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது : முக்கிய சுற்றுலா தளமான கோவை குற்றாலம் இரண்டு மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக தொடர் கனமழையால் குற்றாலம் செல்லும் பாதைகளில் முறிந்து விழுந்த மரக்கிளைகள் அகற்றும் பணிகள், மற்றும் சாலைகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதே போலக் குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்கும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மாதங்களாக மக்கள் நடமாட்டம் இல்லாததால், பகல் நேரங்களிலும் வன விலங்குகள் அங்கு வந்து சென்றது. இதனால் வனத்துறை ஊழியர்கள் கோவை குற்றாலம் அருகே கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்தன