tamilnadu

img

மாநில மொழி தெரிந்தவர்கள் மட்டுமே ரயில்வே பணியில் அமர்த்த வேண்டும் -பி.ஆர்.நடராஜன்

ரயில் நிலைய அதிகாரிகள் அலுவலகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், தமிழில் பேசக் கூடாது என தென்னக ரயில்வே மேலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு ரயில்வே ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்
தென்னக ரயில்வேயின் இந்த உத்தரவு வன்மையான கண்டனத்துக்கு உரியது எனவும், இரண்டு மாதத்திற்கு முன்னர் தமிழகத்தில் மொழி பிரச்சனையால் ஏற்பட இருந்த மிகப்பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது, மொழி பிரச்சினையின் காரணமாக ஒரு விபத்து என்பது தமிழகத்தில் இல்லை, இரண்டு மாதற்கு முன்னர் இது புதிய பரிணாமத்தை தமிழகத்தில் எட்டியது, இந்த நிலைக்கு பின்னரும்  தென்னக ரயில்வே எதையும் கருத்தில் கொள்ளாமல் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும்தான் இந்த உத்தரவுகள் இருக்க வேண்டும் என்பது சொல்லியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் இதை திரும்பப் பெற வேண்டும் பழைய நடைமுறை என்பது மட்டுமல்ல மாநில மொழி தெரிந்தவர்கள் மட்டும்தான் பணியில் அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் அது ரயில்வே மேம்பாட்டுக்காகவும் ரயில் விபத்துக்களை தவிர்க்கவும் பெருமளவுக்கு பயன்படும் என்ற காரணத்தினால் இந்த உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம் இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் பிரச்சினையையும், கேள்வியையும் எழுப்புவோம் என தெரிவித்தார்..