tamilnadu

img

பொள்ளாச்சி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை

பொள்ளாச்சி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.    

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள முத்தூர் கிராமத்தை சேர்ந்த கீர்த்திவாசன் ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில் 4 ஆவது முறையாக கடந்த மாதம் அத்தேர்வை எழுதினார். இந்நிலையில் நேற்று மாலை கீர்த்திவாசன் விஷமருந்தி உள்ளார். உடனே கீர்த்திவாசனை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

விசாரணையில் நீட் தேர்வில் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும் மேலும் இந்த முறையும் தேர்ச்சி பெற முடியாதோ என்ற அச்சத்தில் இருந்து வந்ததாகவும் தன் தாயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

;