உதகை, ஜூன் 3- உதகை நகரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கள் நடத்திய திடீர் சோதனையில் ஏராளமான உணவகங்க ளில் காலவதியான சிக்கன், சப்பாத்தி, புரோட்டா போன்ற பல் வேறு உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன. நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் மையப்பகுதி யில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வா யன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட போது கிரில் சிக்கன், சப்பாத்தி, புரோட்டா உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட் கள் காலாவதியானது தெரிய வந்தது. உடனே உணவகங்க ளில் இருந்த அனைத்தையும் குப்பைத் தொட்டியில் போட்டு பின்பு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. இதேபோல் பழரச கடையில் இருந்த பழங்கள் நிறம் மாறி இருந்ததால் உடனடியாக அதை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி அதிகாரிகள் பழங்களையும் அப்புறப்படுத்தினர். சுவை மிகுந்த சாக்லேட் மற்றும் வர்க்கி கடைகளில் நடத்திய சோதனையில் வர்க்கிகள் தேதி குறிப்பிடாமல் பேக்கெட்டில் வைக்கப்பட்டதால் உடனடியாக அப்புறப்படுத்த உத்தர விட்டனர். மேலும் சமையலறைகள் எவ்வாறு உள்ளது? தூய் மையான முறையில் பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு மேற் கொண்டு அதிகாரிகள் சமையலறையிலும் இருந்த உண வுப்பொருட்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். குறிப்பாக வர்க்கி மற்றும் சாக்லெட் பாக்கெட்டுகள் மீது ஸ்டிக்கர்களை ஒட்ட கூடாது என்றும் விலை பட்டியல் உள் ளிட்ட அனைத்து விபரங்கள் அச்சிடப்பட்டபாக்கெட்டு களில் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். அதேபோல் உணவு பாதுகாப்புத் துறை மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் கலந்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறிய மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மருந்து கடைகளில் உணவுப் பொருட்கள் தனியாகவும் மருந்து பொருட்கள் தனியாக வைக்க உத்தரவிட்டார்.
ரூ.15 லட்சம் மோசடி செய்த, அரசுப்பள்ளி ஆசிரியர் மீது வழக்கு
சேலம், ஜூன் 3- மேட்டூர் அருகே ஐடிஐ-யில் பங்குதாரராக சேர்ப்ப தாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக அரசுப்பள்ளி ஆசி ரியர் மற்றும் அவரது மனைவி மீது காவல் நிலையத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள ராமன் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60). இவரிடம் சக்தி நகரில் வசிக்கும் மாணிக்கம் மகன் ராஜாராம், அவரது மனைவி கவிதா ஆகியோர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கலி யனூரில் புதிதாக ஐடிஐ தொடங்குவதாகவும், அதற்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் பங்குதாரராக சேர்ப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ஆனால், புதிதாக தொடங்கிய ஐடிஐ-யில் பாலகிருஷ்ணனை பங்குதாரராக சேர்க்க வில்லை. இதுகுறித்து கேட்டபோது, மேலும் ரூ.10 லட்சம் கொடுத்தால் பங்குதாரராக ஒப்பந்தம் செய்து தருவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து மீண்டும் அவரிடம் ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்ட தம்பதி, ஆண்டுதோறும் லாபமும் தர வில்லை பங்குதாரராக ஒப்பந்தமும் செய்யவில்லை என கூறப்படுகிறது. 10 ஆண்டுகளாக காலம் கடத்தி வந்ததால், தனது பணத்தை திருப்பி தரும்படி பாலகிருஷ்ணன் கேட் டுள்ளாார். அதற்கு, ராஜாராமும் அவரது மனைவியும் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என மிரட்டி யுள்ளனர். இதுகுறித்து பாலகிருஷ்ணன் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ராஜாராம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதும், ராமன்நகரில் உள்ள சக்தி நகரில் டுடோரியல் கல்லூரியும், கரு மலைக்கூடலில் பள்ளிக்கூடமும் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் தொடர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மழைக்கு இடிந்த அரசுப்பள்ளி தடுப்புச்சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
உதகை, ஜூன் 3- நீலகிரி மாவட்டம், உதகை, குந்தா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையின் விளை வாக, மேல்குந்தா பகுதியில் அட்டுமண்ணு கிராமத்திற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளி யின் வளாகத்தில் இருந்த சுமார் 20 அடி உயர கருங்கல் கட்டட தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த அரசு நடுநிலைப்பள்ளியில் பழங்குடியின மாண வர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த நிலையில், வரு வாய்த் துறையினர் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இருப்பினும், அருகிலுள்ள மற்ற தடுப்புச் சுவர்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், அவை எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பெரும் விபத்து ஏற்ப டும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடிந்து விழுந்த பள்ளி கட்டி டத்தை பார்வையிட்டு, விரைவாக சீரமைத்துத் தர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். மேலும், அட்டுமண்ணு கிராமப் பகுதியில் இருந்து இப் பள்ளிக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புச் சுவர்கள் இல்லாத தாலும், சாலை ஓரங்களில் புதர்கள் சூழ்ந்து காணப்படு வதாலும் சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகள் அடிக்கடி உலா வருகின்றன. இதனால் வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே மாண வர்கள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கி றது. ஆகவே, சாலைகளில் உள்ள புதர்களை அப்புறப்ப டுத்தி, சாலையோர தடுப்புச் சுவர்களை அமைத்துத் தர வேண் டும் எனவும் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்க ளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
.குடும்பத்தகராறில் துப்பாக்கிச்சூடு: குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்
சேலம், ஜூன் 3- வாழப்பாடி அருகே குடும்பத்த கராறில், நாட்டு துப்பாக்கியால் சுட் டத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், தேக்கல்பட்டி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி (52). இவரது மனைவி லட்சுமி (48). இவர்களுக்கு மாதேஷ் (29), சுரேஷ் (27) ஆகிய இரண்டு மகன்களும், பரமேஸ் (24) என்ற ஒரு மகளும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி வெவ் வேறு இடங்களில் வசித்து வரு கின்றனர். குப்புசாமி, லட்சுமி இருவ ரும் தேக்கல்பட்டி விவசாயத் தோட் டத்தில் வசித்து வருகின்றனர். தேக் கல்பட்டி மந்தகாடு பகுதியிலுள்ள மற்றொரு விவசாயத் தோட்டத்தில் சுரேஷ் அவரது மனைவி அனிதா, இவர்களின் மகன் சர்வபுத்தி ரன் (ஒன்றரை வயது) ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில், திங்களன்று சுரேஷ் கூலி வேலைக்கு வெளியே சென்ற நிலை யில், குப்புசாமி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப் போது குப்புசாமியும், லட்சுமிக் கும் தகராறு ஏற்பட்டது. இதில் குப்பு சாமி மரக்கட்டையால் லட்சுமியை தலையில் தாக்கியுள்ளார். அப் போது லட்சுமிக்கு ஆதரவாக மரும கள் அனிதா, தன் மகன் சர்வபுத் திரனை இடுப்பில் சுமந்தபடி சென்று குப்புசாமியை தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி அரசு அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் மருமகள் அனிதாவை நோக்கி துப்பாக்கி யால் சுட்டார். நாட்டு துப்பாக்கி யில் இருந்து பாய்ந்த இரும்பு பால் ரஸ் குண்டுகள் சிறுவன் சர்வபுத்தி ரன் மற்றும் அனிதா ஆகிய இருவர் மீது மீதும் பாய்ந்தது. இதனால் இரு வரும் வலியால் அலறி துடித்த னர். இதையடுத்து அக்கம் பக்கத்தி னர் காயமடைந்தவர்களை மீட்டு வாழப்பாடியில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். அதிக காயமடைந்த சிறுவன் சர் வபுத்திரன் சேலம் தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டார். குண்டு காயங்களுடன் அனிதா மற்றும் தலையில் பலத்த காயத்துடன் லட்சுமி இருவரும் வாழப்பாடி தனியார் மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குப்பு சாமியை தேடி வருகின்றனர்.
செல்போன் மூலம் மின் கணக்கீடு ஊழியர்கள் எதிர்ப்பு – சிஐடியு கடிதம்
ஈரோடு, ஜூன் 3- மின் கணக்கீட்டுப் பணியாளர்களை செல் போன் மற்றும் புளூடூத் மூலம் கணக்கெடுக்கு மாறு வாய்மொழியாக வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பவானி கோட்டத்தில், மின் கணக்கீட்டை செல் போன் மூலமாக எடுக்க நிர்பந்திப்பதாக குற் றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு செயற்பொறியாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதில், மின்வாரியம் செல்போன் செயலி மற்றும் புளூடூத் மூலம் கணக்கீட்டுப் பணி மேற்கொள்ளத் தேவையான செல்போன், சிம்கார்டு, மற்றும் ரீசார்ஜ் கட்டணங்கள் வாரியத்தால் வழங்கப்படவில்லை. நிர்வா கம் எந்தவொரு உத்தரவையும் அல்லது அதற்கான நிதியையும் வழங்காத நிலை யில், ஊழியர்களை கட்டாயமாக செல்போன் மூலம் கணக்கெடுக்குமாறு நிர்பந்திப்பது வாரியம் தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வது போல் உள்ளது. பொதுவாக, அலுவல் ரீதியாக ஊழியர் கள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத் தும் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக் கும். அவை தளவாடப் பொருட்கள் பதி வேட்டில் பதிவு செய்யப்பட்டு, பணியாளர் கள் இடமாறுதல் அல்லது பதவி உயர்வு பெறும் போது அடுத்தவரிடம் ஒப்படைக்கப்ப டும். ஆனால், தற்போது ஊழியர்களின் சொந்த செல்போன்களைப் பயன்படுத்த வற் புறுத்துவது இந்த நடைமுறைக்கு முர ணானது. வாரியத்தின் செயலியை மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்ட செல்போன்கள் நீண்ட காலத்திற்குப் பய னுள்ளதாக இருக்கும். மேலும், 50 சதவீதத்திற்கும் மேலான மின் இணைப்புகள் வாரிய விதிகளின்படி புளூடூத் மூலம் கணக்கீடு செய்யும் வகையில் இல்லை, உயரமான அல்லது அணுக முடி யாத இடங்களில் மொபைல் செயலி மூலம் கணக்கீடு செய்வது இயலாத காரியம். எனவே, ஊழியர்களுக்கு செல்போன், சிம்கார்டு மற்றும் இணைய வசதிக்காக மாதம் ரூ.500 வழங்க வேண்டும். அதுவரை செல்போன் மற்றும் புளூடூத் வாயிலாக கணக் கீடு செய்ய ஊழியர்களை நிர்பந்திக்கக் கூடாது என சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தி யுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தொடர்
விழுப்புரம், ஜூன் 3 - காணை ஒன்றியம், பழைய கரு வாட்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் சார்பில் பல ஆண்டுகளாக நடத்தப் பட்ட தொடர் போராட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டம், காணை ஒன்றியம் பழைய கருவாட்சி கிராமத்தில் 300 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு புறம்போக்கில் 118/2பி-ல் சாலை அமைக்கக் கோரி பல முறை பேச்சுவார்த்தை என்ற பெய ரில் காலம் கடத்தும் வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் உடனடியாக புறம்போக்கு ஆக் கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டைநாமம் போட்டு காத்திருக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தின் விளைவாக வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு புறம்போக்கு இடங்களை மீட்டு, கடந்த ஒரு வாரமாக சீரமைப்பு செய்து விவ சாயிகள் பயன்பாட்டு சாலையாக மாற்றியமைத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. முருகன், மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன், மாவட்டப் பொருளாளர் பி.சிவராமன் உட்பட ஏராளமானோர் இந்த வெற்றிக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ள னர். அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் இதனை வரவேற்றுள் ளனர்.
நெருங்கும் பக்ரீத்: ஆடுகள் விற்பனை தீவிரம் தருமபுரி,
ஜூன் 3- பக்ரீத் நெருங்கியுள்ள நிலையில், ஆடுகள் விற்பனை தீவி ரமாக நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக் கம். இங்கு ஆடுகள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அதி காலை 4 மணி முதல் விற்பனைக்கு கொண்டு வரப்படு கிறது. இந்நிலையில், ஜூன் 7 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், செவ்வாயன்று அதிகாலை 5 மணிக்கே ஆட்டுச்சந்தை கூடியது. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும், கிருஷ்ணகிரி, சேலம், தரும புரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்தனர். பக்ரீத் பண்டிகையால், செம்மறி மற் றும் வெள்ளாடுகளை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். 40 கிலோ வரையிலான ஆடுகள் அதிகள வில் சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. அதிக எடை கொண்ட ஆடுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. மேலும், 10 கிலோ கொண்ட செம்மறி ஆடு ரூ.10 முதல் ரூ.11 ஆயிரம் வரையும், 10 கிலோ கொண்ட வெள் ளாடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய் யப்பட்டன. மொத்தம் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற் பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.